حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ ح و حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ نَافِعًا مَوْلَى ابْنِ عُمَرَ يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي بَكْرِ بْنِ أَبِي قُحَافَةَ يُحَدِّثُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهَا قَالَتْ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَوْلَا أَنَّ قَوْمَكِ حَدِيثُو عَهْدٍ بِجَاهِلِيَّةٍ أَوْ قَالَ بِكُفْرٍ لَأَنْفَقْتُ كَنْزَ الْكَعْبَةِ فِي سَبِيلِ اللَّهِ وَلَجَعَلْتُ بَابَهَا بِالْأَرْضِ وَلَأَدْخَلْتُ فِيهَا مِنْ الْحِجْرِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (என்னிடம்), “உன் சமுதாயத்தார் அறியாமைக் காலத்திலிருந்து அல்லது இறைமறுப்பிலிருந்து விலகி (இஸ்லாத்துக்கு) வந்த அண்மைக் காலத்தவராக இல்லையெனில், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், ‘ஹிஜ்ரு’ எனும் அரைவட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலைவாயிலை(க்கீழிறக்கி)ப் பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
குறிப்பு :
‘ஹிஜ்ரு’ என்பது கஅபாவிலுள்ள ‘ஹஜருல் அஸ்வத்’ எனும் (1)கருப்புக் கல் மூலையின் வலப்பக்கத்தில், கஅபாவின் (2)இரண்டாவது, (3)மூன்றாவது மூலைகளுக்கு நடுவே சற்றுத் தள்ளி அமைந்திருக்கும் அரை வட்டப் பகுதியாகும். அது, ‘ஹிஜ்ரு இஸ்மாயீல்’ என்றும் வழங்கப்படும்.
இரண்டாவது மூலை ‘ருக்னுல் இராக்கி’ என்றும் மூன்றாவது மூலை ‘ருக்னுஷ் ஷாமி’ என்றும் வழங்கப்படும்.