அத்தியாயம்: 15, பாடம்: 85, ஹதீஸ் எண்: 2429

‏و حَدَّثَنَاه ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَاصِمٌ ‏ ‏قَالَ: ‏

قُلْتُ ‏ ‏لِأَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَحَرَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏قَالَ نَعَمْ مَا بَيْنَ كَذَا إِلَى كَذَا فَمَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏قَالَ ثُمَّ قَالَ لِي هَذِهِ شَدِيدَةٌ ‏ ‏مَنْ ‏ ‏أَحْدَثَ ‏ ‏فِيهَا ‏ ‏حَدَثًا ‏ ‏فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يَقْبَلُ اللَّهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ ‏ ‏صَرْفًا ‏ ‏وَلَا ‏ ‏عَدْلًا ‏
‏قَالَ فَقَالَ ‏ ‏ابْنُ أَنَسٍ ‏ ‏أَوْ ‏ ‏آوَى ‏ ‏مُحْدِثًا

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவைப் புனித நகரமாக அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; இங்கிருந்து … அதுவரை (மதீனா புனிதமானது என்று அறிவித்தார்கள். மேலும் சொன்னார்கள்:) அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றானோ. அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். (-இது ஒரு கடுமையான எச்சரிக்கை-) அவன் செய்த கடமையான வழிபாடு மற்றும் உபரியான வழிபாடு எதையுமே அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று கூறினார்கள் என விடையளித்தார்கள்.

அப்போது மூஸா பின் அனஸ் (ரஹ்) “ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றவன், அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கின்றவன்” என்று (சேர்த்துக்கொள்ளுமாறு) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்)

Share this Hadith: