حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو مَوْلَى الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ الْتَمِسْ لِي غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يُرْدِفُنِي وَرَاءَهُ فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا نَزَلَ وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ أَقْبَلَ حَتَّى إِذَا بَدَا لَهُ أُحُدٌ قَالَ هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ فَلَمَّا أَشْرَفَ عَلَى الْمَدِينَةِ قَالَ اللَّهُمَّ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ جَبَلَيْهَا مِثْلَ مَا حَرَّمَ بِهِ إِبْرَاهِيمُ مَكَّةَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مُدِّهِمْ وَصَاعِهِمْ
و حَدَّثَنَاه سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَا حَدَّثَنَا يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ إِنِّي أُحَرِّمُ مَا بَيْنَ لَابَتَيْهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (கைபருக்குப் புறப்படுமுன்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம், “உங்கள் சிறுவர்களுள் ஒரு சிறுவனை எனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தேடித் தாருங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) என்னை வாகனத்தில் தமக்குப் பின்னால் அமரவைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வழியில்) தங்கும்போதெல்லாம் அவர்களுக்கு நான் பணிவிடைகள் செய்துவந்தேன்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மதீனாவுக்குத் திரும்பி) வந்துகொண்டிருந்தபோது, ‘உஹுத் மலை’ அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “இந்த மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதை நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள். பிறகு மதீனா தென்பட்டபோது, “இறைவா! இப்ராஹீம் (அலை) மக்காவைப் புனித நகரமாக அறிவித்ததைப் போன்று, இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியைப் புனித(நகர)மாக நான் அறிவிக்கின்றேன். இறைவா! மதீனாவாசிகளின் (முகத்தல் அளவைகளான) ‘முத்’துவிலும் ‘ஸாஉ’விலும் நீ வளத்தை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
குறிப்பு :
யாகூப் பின் அப்திர்ரஹ்மான் அல் காரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த இரு மலைகளுக்கிடையே உள்ள பகுதியை …“ என்பதற்குப் பதிலாக “இந்த இரு கருங்கல் மலைகளுக்கிடையே உள்ள பகுதியை …“ என்று இடம்பெற்றுள்ளது.