அத்தியாயம்: 16, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2566

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏بِهِ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏قَالَ: ‏

صَارَتْ ‏ ‏صَفِيَّةُ ‏ ‏لِدِحْيَةَ ‏ ‏فِي مَقْسَمِهِ وَجَعَلُوا يَمْدَحُونَهَا عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ وَيَقُولُونَ مَا رَأَيْنَا فِي ‏ ‏السَّبْيِ ‏ ‏مِثْلَهَا قَالَ فَبَعَثَ إِلَى ‏ ‏دِحْيَةَ ‏ ‏فَأَعْطَاهُ بِهَا مَا أَرَادَ ثُمَّ دَفَعَهَا إِلَى أُمِّي فَقَالَ ‏ ‏أَصْلِحِيهَا ‏ ‏قَالَ ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏خَيْبَرَ ‏ ‏حَتَّى إِذَا جَعَلَهَا فِي ظَهْرِهِ نَزَلَ ثُمَّ ضَرَبَ عَلَيْهَا ‏ ‏الْقُبَّةَ ‏ ‏فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ كَانَ عِنْدَهُ ‏ ‏فَضْلُ ‏ ‏زَادٍ ‏ ‏فَلْيَأْتِنَا بِهِ قَالَ فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ ‏ ‏بِفَضْلِ ‏ ‏التَّمْرِ ‏ ‏وَفَضْلِ ‏ ‏السَّوِيقِ ‏ ‏حَتَّى جَعَلُوا مِنْ ذَلِكَ ‏ ‏سَوَادًا ‏ ‏حَيْسًا ‏ ‏فَجَعَلُوا يَأْكُلُونَ مِنْ ذَلِكَ ‏ ‏الْحَيْسِ ‏ ‏وَيَشْرَبُونَ مِنْ حِيَاضٍ إِلَى جَنْبِهِمْ مِنْ مَاءِ السَّمَاءِ قَالَ فَقَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏فَكَانَتْ تِلْكَ ‏ ‏وَلِيمَةَ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهَا قَالَ فَانْطَلَقْنَا حَتَّى إِذَا رَأَيْنَا جُدُرَ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏هَشِشْنَا ‏ ‏إِلَيْهَا ‏ ‏فَرَفَعْنَا ‏ ‏مَطِيَّنَا ‏ ‏وَرَفَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَطِيَّتَهُ ‏ ‏قَالَ ‏ ‏وَصَفِيَّةُ ‏ ‏خَلْفَهُ قَدْ ‏ ‏أَرْدَفَهَا ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَعَثَرَتْ ‏ ‏مَطِيَّةُ ‏ ‏رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصُرِعَ ‏ ‏وَصُرِعَتْ قَالَ فَلَيْسَ أَحَدٌ مِنْ النَّاسِ يَنْظُرُ إِلَيْهِ وَلَا إِلَيْهَا حَتَّى قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَتَرَهَا قَالَ فَأَتَيْنَاهُ فَقَالَ لَمْ نُضَرَّ قَالَ فَدَخَلْنَا ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏فَخَرَجَ ‏ ‏جَوَارِي ‏ ‏نِسَائِهِ يَتَرَاءَيْنَهَا وَيَشْمَتْنَ ‏ ‏بِصَرْعَتِهَا

ஸஃபிய்யா, திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர்களது (கைபர் போர்ச் செல்வத்தின்) பங்கில் சேர்ந்துவிட்டிருந்தார்கள். மக்கள் ஸஃபிய்யா அவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாராட்டிப் பேசினர். “கைதிகளில் அவரைப் போன்று (அழகான) வேறெவரையும் நாங்கள் பார்க்கவில்லை” என்று (கூறி, அவரை மணந்துகொள்ளுமாறு) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), திஹ்யா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி (அவர்களை வரவழைத்து) ஸஃபிய்யாவுக்குப் பகரமாக திஹ்யா (ரலி) விரும்பியவற்றைக் கொடுத்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஃபிய்யா அவர்களை என் தாயாரிடம் ஒப்படைத்து, “இவரை அலங்காரம் செய்க” என்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரிலிருந்து (மதீனாவுக்குப்) புறப்பட்டார்கள். கைபரைக் கடந்துவந்ததும் (ஓரிடத்தில்) இறங்கி, ஸஃபிய்யாவுக்காகக் கூடாரம் அமைத்தார்கள். (அங்கு இரவில் தங்கினார்கள்) விடிந்ததும், “உணவுப் பொருட்களில் ஏதேனும் எஞ்சியவற்றை வைத்திருப்பவர், அவற்றை நம்மிடம் கொண்டுவரவும்” என்றார்கள்.

அப்போது ஒருவர் தமது தேவைக்கு எஞ்சிய பேரீச்சம் பழங்களையும் மாவையும் கொண்டுவந்தார். (மற்றவர்கள் அவரவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டுவந்தனர்.) அதில் ‘ஹைஸ்’ உணவின் ஒரு குவியலையே உருவாக்கி, அதிலிருந்து உண்ணத் தொடங்கினர். பிறகு அவர்களுக்கு அருகிலிருந்த மழை நீர் குட்டையிலிருந்து நீர் அருந்தினர். அதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக அளித்த மண விருந்தாக அமைந்தது.

பிறகு நாங்கள் பயணத்தைத் தொடர்ந்து, மதீனாவின் சுவர்களைக் கண்டு குதூகலித்தோம். நாங்கள் எங்கள் வாகனத்தை விரைவாகச் செலுத்தினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தமது வாகனத்தை விரைவாகச் செலுத்தினார்கள். அப்போது ஸஃபிய்யா (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் இருந்தார்கள். தமக்குப் பின்னால் (இருக்கையமைத்து) அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமரவைத்திருந்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகம் கால் இடறி விழுந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஒட்டகத்திலிருந்து விழுந்துவிட்டனர். மக்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையோ ஸஃபிய்யா (ரலி) அவர்களையோ பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாமே எழுந்து, ஸஃபிய்யா (ரலி) அவர்களை (திரையிட்டு) மறைத்தார்கள். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நமக்கு எந்தப் பாதிப்பும் நேரவில்லை” என்றார்கள். பின்னர் நாங்கள் மதீனாவுக்குள் நுழைந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இளம் துணைவியர் புதுமணப் பெண்ணைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டு வந்து, அவர் கீழே விழுந்ததை அறிந்து உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: