و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ:
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيُجِبْ
قَالَ خَالِدٌ فَإِذَا عُبَيْدُ اللَّهِ يُنَزِّلُهُ عَلَى الْعُرْسِ
“உங்களில் ஒருவர் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
குறிப்பு :
“வலீமா என்பது மணமகன் அளிக்கும் விருந்தையே குறிக்கும் என உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) கூறினார்கள்.