و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ:
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَنَاجَشُوا وَلَا يَبِعْ الْمَرْءُ عَلَى بَيْعِ أَخِيهِ وَلَا يَبِعْ حَاضِرٌ لِبَادٍ وَلَا يَخْطُبْ الْمَرْءُ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلَا تَسْأَلْ الْمَرْأَةُ طَلَاقَ الْأُخْرَى لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا
و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ جَمِيعًا عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي حَدِيثِ مَعْمَرٍ وَلَا يَزِدْ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ
“வாங்கும் எண்ணமின்றி (ஒரு பொருளை) விலை ஏற்றிவிடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, (அதில் குறுக்கிட்டு) மற்றவர் வியாபாரம் செய்ய வேண்டாம்; வெளியூரிலிருந்து (விற்பனைப் பொருட்கள் கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரன் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது (அதில் குறிக்கிட்டுத் தமக்காகப்) பெண் பேச வேண்டாம்; ஒரு பெண், தன் சக்களத்தியின் உரிமையைப் பறித்து(த் தனதாக்கி)க்கொள்ள, அவளை மணவிலக்குச் செய்யுமாறு (அவளுடைய கணவனிடம்) கேட்க வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம் (முஸ்லிம்) சகோதரன் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது, எவரும் (அதில் குறுக்கிட்டு விலையை) அதிகமாக்கிவிட வேண்டாம்” என இடம்பெற்றுள்ளது.