و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ:
أَنَّهَا كَانَتْ تَقُولُ أَمَا تَسْتَحْيِي امْرَأَةٌ تَهَبُ نَفْسَهَا لِرَجُلٍ حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ
” تُرْجِي مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ “
فَقُلْتُ إِنَّ رَبَّكَ لَيُسَارِعُ لَكَ فِي هَوَاكَ
நான், “ஒரு பெண் தன்னைத் தானே ஓர் ஆணுக்குக் கொடையாக வழங்க வெட்கப்பட மாட்டாளா?” என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பின்னர் “(நபியே! உங்கள் துணைவியராகிய) அவர்களில் நீங்கள் (விரும்பும் காலம்வரை) விரும்பியவர்களை ஒதுக்கிவைக்கலாம்; நீங்கள் விரும்பியவர்களை உங்களுடன் இருக்கவைக்கலாம்” எனும் (33:51ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் நபியவர்களிடம் “உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைந்து நிறைவேற்றுகின்றான்” என்று சொன்னேன்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)