அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2617

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّ ‏ ‏أَفْلَحَ ‏ ‏أَخَا ‏ ‏أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَ يَسْتَأْذِنُ عَلَيْهَا وَهُوَ عَمُّهَا مِنْ الرَّضَاعَةِ بَعْدَ أَنْ أُنْزِلَ الْحِجَابُ قَالَتْ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَخْبَرْتُهُ بِالَّذِي صَنَعْتُ ‏ ‏فَأَمَرَنِي أَنْ آذَنَ لَهُ عَلَيَّ ‏


و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏أَتَانِي عَمِّي مِنْ الرَّضَاعَةِ ‏ ‏أَفْلَحُ بْنُ أَبِي قُعَيْسٍ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَزَادَ قُلْتُ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ قَالَ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَدَاكِ أَوْ يَمِينُكِ

அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது நான் அவருக்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது, நான் அவருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனக்கு உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூகுஐஸின் புதல்வர் அஃப்லஹ் (ரலி) என்னிடம் வந்தார். அவர் என் பால்குடித் தந்தையின் சகோதரர் ஆவார் …” என்று இடம்பெற்றுள்ளது. மேலும், ஆயிஷா (ரலி) (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(அவருடைய) மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்; அவர் எனக்குப் பாலூட்டவில்லை. (எனவே அஃப்லஹ் அவர்களுக்கு நான் அனுமதியளிக்கமாட்டேன்)” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் இரு கைகளும் அல்லது உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்(*)” என்று கூறினார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

(*) “உன் கை / மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” எனபதெல்லாம் நேரடிப் பொருள் தராத, பிறரைக் கண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அரபு இலக்கியச் சொற்கள்.

Share this Hadith: