அத்தியாயம்: 17, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2618

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ: ‏

‏أَنَّهُ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏أَبَا ‏ ‏عَائِشَةَ ‏ ‏مِنْ الرَّضَاعَةِ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقُلْتُ وَاللَّهِ لَا آذَنُ ‏ ‏لِأَفْلَحَ ‏ ‏حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِنَّ ‏ ‏أَبَا الْقُعَيْسِ ‏ ‏لَيْسَ هُوَ أَرْضَعَنِي وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَلَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ ‏ ‏جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَيَّ فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ قَالَتْ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ائْذَنِي لَهُ ‏


قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَبِذَلِكَ كَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏تَقُولُ ‏ ‏حَرِّمُوا مِنْ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنْ النَّسَبِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ جَاءَ ‏ ‏أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ ‏ ‏يَسْتَأْذِنُ عَلَيْهَا ‏ ‏بِنَحْوِ حَدِيثِهِمْ وَفِيهِ فَإِنَّهُ عَمُّكِ ‏ ‏تَرِبَتْ ‏ ‏يَمِينُكِ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو الْقُعَيْسِ ‏ ‏زَوْجَ الْمَرْأَةِ الَّتِي أَرْضَعَتْ ‏ ‏عَائِشَةَ

அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) என் வீட்டிற்கு வந்து, உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டார். அப்போது நான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல் குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய மனைவிதான் எனக்குப் பாலூட்டினார்” என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வந்ததும் நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்), “அவருக்கு நீ அனுமதியளிக்கலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

“அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார். ஹிஜாப் சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது.

இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி), “இரத்த உறவால் மணமுடிக்கத் தகாத உறவுகளாக நீங்கள் ஆக்குகின்ற உறவுகளை, பால்குடி உறவின் மூலமும் மணமுடிக்கத் தகாத உறவுகளாக ஆக்கிவிடுங்கள்” என்று கூறுவார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான உர்வா (ரஹ்) கூறுகின்றார்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உனது வலக்கை மண்ணைக் கவ்வட்டும். அவர் (அஃப்லஹ்) உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் ஆவார்” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், “அபுல் குஐஸ், ஆயிஷா (ரலி) அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாயின் கணவர் ஆவார்” என்றும் காணப்படுகிறது.

Share this Hadith: