حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ أَخْبَرَنَا هِشَامٌ أَخْبَرَنِي أَبِي عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ قَالَتْ:
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ لَهُ هَلْ لَكَ فِي أُخْتِي بِنْتِ أَبِي سُفْيَانَ فَقَالَ أَفْعَلُ مَاذَا قُلْتُ تَنْكِحُهَا قَالَ أَوَ تُحِبِّينَ ذَلِكِ قُلْتُ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَرِكَنِي فِي الْخَيْرِ أُخْتِي قَالَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِي قُلْتُ فَإِنِّي أُخْبِرْتُ أَنَّكَ تَخْطُبُ دُرَّةَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ قَالَ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حِجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا ابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَاهَا ثُوَيْبَةُ فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ
و حَدَّثَنِيهِ سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ح و حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ حَدَّثَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ أَخْبَرَنَا زُهَيْرٌ كِلَاهُمَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ بِهَذَا الْإِسْنَادِ سَوَاءً
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம், “அபூஸுஃப்யானின் மகளான என் சகோதரி விஷயத்தில் தங்களுக்கு நாட்டம் உண்டா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். நான் “அவளை நீங்கள் மணந்துகொள்ள வேண்டும்” என்றேன். அவர்கள், “இதை நீ விரும்புகின்றாயா?” என்று கேட்டார்கள். நான், “தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் (மனைவியென்று) இல்லையே! (தங்களுக்கு மனைவியாகும்) பாக்கியத்தில் என்னுடன் என் சகோதரிக்கும் பங்கு கிடைப்பதை நான் பெரிதும் விரும்புகின்றேன்” என்று சொன்னேன்.
அதற்கு நபி (ஸல்), “அ(வளை மணப்ப)து எனக்கு அனுமதிக்கப்பட்டதன்று” என்றார்கள். நான், “தாங்கள் அபூஸலமாவின் மகள் ’துர்ரா’வைப் பெண் கேட்பதாகக் கேள்விப்பட்டேனே!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “உம்மு ஸலமா (வுக்கு முந்தைய கணவன் மூலம் பிறந்த) மகளையா?” என்று கேட்க, நான் “ஆம்” என்றேன். அவர்கள், “அவள் என் வளர்ப்பு மகளாக (இருந்து வருகின்றாள். அப்படி) இல்லாவிட்டாலும்கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்,) அவள் என் பால்குடிச் சகோதரரின் மகளாவாள். எனக்கும் அவளுடைய தந்தை(அபூஸலமாவு)க்கும் ‘ஸுவைபா’ (எனும் அடிமைப் பெண்) பாலூட்டியிருக்கிறார். ஆகவே, உங்கள் பெண் மக்களையோ உங்கள் சகோதரிகளையோ (மணந்து கொள்ளும்படி) என்னிடம் கோராதீர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஹபீபா பின்த்தி அபீஸுஃப்யான் (ரலி)
குறிப்பு :
மனைவி உயிரோடிருக்கும்போது அவளுடைய சகோதரியை மணக்க முடியாது; வளர்ப்பு மகளை மணக்க முடியாது; பால்குடிச் சகோதரரின் மகளை மணக்க முடியாது.