حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ وَاللَّفْظُ لِابْنِ رَافِعٍ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ:
كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ عُمَرَ طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّاسَ قَدْ اسْتَعْجَلُوا فِي أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ فَأَمْضَاهُ عَلَيْهِمْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ரு (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள் என்பது ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி), “தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, (ஒரே நேரத்தில் மக்களால் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) அவர்களுக்குப் பாதகமானதாக நாம் செயல்படுத்துவோம்” என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி
குறிப்பு :
ஒரே நேரத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்குகள், ஒரு தலாக்காகவே கணிக்கப்படும்.