அத்தியாயம்: 18, பாடம்: 9, ஹதீஸ் எண்: 2735

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدِ بْنِ نَافِعٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ ‏ ‏تُحَدِّثُ عَنْ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏وَأُمِّ حَبِيبَةَ: ‏

‏تَذْكُرَانِ أَنَّ ‏ ‏امْرَأَةً ‏ ‏أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَتْ لَهُ أَنَّ بِنْتًا لَهَا تُوُفِّيَ عَنْهَا ‏ ‏زَوْجُهَا ‏ ‏فَاشْتَكَتْ عَيْنُهَا فَهِيَ تُرِيدُ أَنْ تَكْحُلَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ ‏ ‏كَانَتْ إِحْدَاكُنَّ ‏ ‏تَرْمِي بِالْبَعْرَةِ ‏ ‏عِنْدَ رَأْسِ ‏ ‏الْحَوْلِ ‏ ‏وَإِنَّمَا هِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் மகளின் கணவர் இறந்து விட்டார். (அவள் தற்போது ‘இத்தா’ இருக்கும் நிலையில்) அவளது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவளுக்கு நான் அஞ்சனம் தீட்டிவிட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி ஓராண்டு நிறைவடையும்போது ஒட்டகச் சாணத்தை விட்டெறிவாள். (ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடித்து ‘இத்தா’ இருந்துவந்தாள். இப்போது,) ‘இத்தா’ என்பது நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டுமே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்கள் : அன்னை உம்மு ஸலமா (ரலி) மற்றும் அன்னை உம்மு ஹபீபா (ரலி)

Share this Hadith: