அத்தியாயம்: 19, பாடம்: 1, ஹதீஸ் எண்: 2752

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ ‏ ‏سَعْدَ بْنَ عُبَادَةَ الْأَنْصَارِيَّ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يَجِدُ مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا قَالَ ‏ ‏سَعْدٌ ‏ ‏بَلَى وَالَّذِي أَكْرَمَكَ بِالْحَقِّ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْمَعُوا إِلَى مَا يَقُولُ سَيِّدُكُمْ

ஸஅத் பின் உபாதா அல்அன்ஸாரி (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா, சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கூடாது” என்று பதிலளித்தார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “இல்லை (அவனைக் கொல்லத்தான் தோன்றும்); சத்திய(மார்க்க)த்தால் தங்களைக் கண்ணியப்படுத்தியவன்மீது ஆணையாக!” என்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “உங்கள் தலைவர் என்ன சொல்கின்றார், கேட்டீர்களா?” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: