அத்தியாயம்: 2, பாடம்: 13, ஹதீஸ் எண்: 368

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَلَفٌ يَعْنِي ابْنَ خَلِيفَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏قَالَ ‏:‏

كُنْتُ خَلْفَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ فَكَانَ يَمُدُّ يَدَهُ حَتَّى تَبْلُغَ إِبْطَهُ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏مَا هَذَا الْوُضُوءُ فَقَالَ يَا ‏ ‏بَنِي فَرُّوخَ ‏ ‏أَنْتُمْ هَاهُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ سَمِعْتُ ‏ ‏خَلِيلِي ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تَبْلُغُ ‏ ‏الْحِلْيَةُ ‏ ‏مِنْ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ ‏

தொழுகைக்காக உளூச் செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.

நான், “அபூஹுரைரா அவர்களே! இது என்ன (புது) உளூ?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்கு இருந்தீர்களா? நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள் என்று தெரிந்திருந்தால் இவ்வாறு உளூச் செய்திருக்க மாட்டேன். என் உற்ற தோழர் (நபி-ஸல்), ‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூ ஹாஸிம் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment