அத்தியாயம்: 2, பாடம்: 16, ஹதீஸ் எண்: 384

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ قَالَتْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرٌ مِنْ الْفِطْرَةِ قَصُّ الشَّارِبِ وَإِعْفَاءُ اللِّحْيَةِ وَالسِّوَاكُ وَاسْتِنْشَاقُ الْمَاءِ وَقَصُّ الْأَظْفَارِ وَغَسْلُ الْبَرَاجِمِ وَنَتْفُ الْإِبِطِ وَحَلْقُ الْعَانَةِ وَانْتِقَاصُ الْمَاءِ قَالَ زَكَرِيَّاءُ قَالَ مُصْعَبٌ وَنَسِيتُ الْعَاشِرَةَ إِلَّا أَنْ تَكُونَ الْمَضْمَضَةَ
زَادَ قُتَيْبَةُ قَالَ وَكِيعٌ انْتِقَاصُ الْمَاءِ يَعْنِي الِاسْتِنْجَاءَ و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ عَنْ أَبِيهِ عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ فِي هَذَا الْإِسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ أَبُوهُ وَنَسِيتُ الْعَاشِرَةَ

“மீசையைக் கத்தரிப்பது, தாடியை வளர்ப்பது, பல் துலக்குவது, நாசிக்கு நீர் செலுத்துவது, நகங்களை வெட்டுவது, விரல் கணுக்களைக் கழுவுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மறையுறுப்பின் முடிகளை மழிப்பது, (மல, ஜலம் கழித்தப் பின்) தண்ணீரால் துப்புரவு செய்வது ஆகிய பத்தும் இயற்கை மரபுவழியைச் சார்ந்தவை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸை முஸ்அப் பின் ஷைபா (ரஹ்) கூறச் செவியுற்ற ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்), “பத்தாவது என்ன என்பதை நான் மறந்து விட்டேன். அது வாய் கொப்புளிப்பதாய் இருக்கலாம் என்று முஸ்அப் (ரஹ்) ஐயத்துடன் கூறினார்” எனக் குறிப்பிடுகிறார்.

குதைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘இன்த்திகாஸுல் மாஇ’ எனும் சொற்றொடருக்கு ‘(மல-ஜலம் கழித்த பின்) துப்புரவு செய்தல்’ என்று பொருள்” எனக் கூடுதல் விளக்கம் இடம் பெற்றுள்ளது.

அபூ குரைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அந்தப் பத்தாவது என்ன என்பதை மறந்து விட்டேன்” எனக் கூறியவர் தம் தந்தை அபூ ஸாயிதா (ரஹ்)தாம் என ஸகரிய்யா பின் அபீஸாயிதா (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment