حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ قَالَ :
كَانَ أَبُو مُوسَى يُشَدِّدُ فِي الْبَوْلِ وَيَبُولُ فِي قَارُورَةٍ وَيَقُولُ إِنَّ بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ جِلْدَ أَحَدِهِمْ بَوْلٌ قَرَضَهُ بِالْمَقَارِيضِ فَقَالَ حُذَيْفَةُ لَوَدِدْتُ أَنَّ صَاحِبَكُمْ لَا يُشَدِّدُ هَذَا التَّشْدِيدَ فَلَقَدْ رَأَيْتُنِي أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَمَاشَى فَأَتَى سُبَاطَةً خَلْفَ حَائِطٍ فَقَامَ كَمَا يَقُومُ أَحَدُكُمْ فَبَالَ فَانْتَبَذْتُ مِنْهُ فَأَشَارَ إِلَيَّ فَجِئْتُ فَقُمْتُ عِنْدَ عَقِبِهِ حَتَّى فَرَغَ
சிறுநீர் (கழிக்கும்) விஷயத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், “சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்துவிடக் கூடியவராக இஸ்ரவேலர்களில் ஒருவர் இருந்தார்” என்று கூறுவார்கள்.
ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) (இதைக் கேள்வியுற்றபோது), “உங்கள் தோழர் (அபூமூஸா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் (கூற) விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆயத்தமானார்கள். நான் அவர்களை விட்டும் விலகிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று, அவர்களுக்குப் பின்பக்கம் நின்று, அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களை மறைத்துக் கொண்டிருந்தேன்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) வழியாக அபூவாஇல் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)