அத்தியாயம்: 2, பாடம்: 31, ஹதீஸ் எண்: 430

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُؤْتَى بِالصِّبْيَانِ ‏ ‏فَيُبَرِّكُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏وَيُحَنِّكُهُمْ ‏ ‏فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அக்குழந்தைகளின் அருள்வளத்துக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்து, இனிப்புப் பொருளை மென்று அக்குழந்தைகளின் வாயிலிடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஓர் ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டது. அது அவர்கள் மீது சிறுநீர் கழித்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி சிறுநீர் கழித்த இடத்தில் (மட்டும்) தண்ணீரைத் தெளித்தார்கள்; (முற்றாகக்) கழுவவில்லை.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

Share this Hadith:

Leave a Comment