و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ خَالِدٍ عَنْ أَبِي مَعْشَرٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ :
أَنَّ رَجُلًا نَزَلَ بِعَائِشَةَ فَأَصْبَحَ يَغْسِلُ ثَوْبَهُ فَقَالَتْ عَائِشَةُ إِنَّمَا كَانَ يُجْزِئُكَ إِنْ رَأَيْتَهُ أَنْ تَغْسِلَ مَكَانَهُ فَإِنْ لَمْ تَرَ نَضَحْتَ حَوْلَهُ وَلَقَدْ رَأَيْتُنِي أَفْرُكُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرْكًا فَيُصَلِّي فِيهِ
ஒருவர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவிக் கொண்டிருந்தார். (அதைக் கண்ட அன்னை) ஆயிஷா (ரலி), “அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்து விடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டிருப்பதை நன்கு சுரண்டி விடுவேன். அந்த ஆடையை அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) வழியாக அல்கமா (ரஹ்) & அல்-அஸ்வத் (ரஹ்)
குறிப்பு :
இந்த ஹதீஸ் பற்றிய கூடுதல் தகவல்கள் ஹதீஸ் எண் 437இல் பதிவாகியுள்ளன. தூக்கத்தில் விந்து வெளியானால் குளிக்காமல் தொழக் கூடாது. எனினும் விந்து, சிறுநீரைப் போன்று அசுத்தமானதன்று. ஆடையில் விந்து பரவிய இடத்தில் தண்ணீர் தெளித்தோ சுரண்டி விட்டோ அதே ஆடையோடு தொழுவதற்குத் தடையில்லை.