அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 518

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَيَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏وَقُتَيْبَةُ ‏ ‏وَابْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكٍ يَعْنِي ابْنَ أَبِي نَمِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ :‏ ‏

‏خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏الِاثْنَيْنِ إِلَى ‏ ‏قُبَاءَ ‏ ‏حَتَّى إِذَا كُنَّا فِي ‏ ‏بَنِي سَالِمٍ ‏ ‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى بَابِ ‏ ‏عِتْبَانَ ‏ ‏فَصَرَخَ بِهِ فَخَرَجَ يَجُرُّ ‏ ‏إِزَارَهُ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْجَلْنَا الرَّجُلَ فَقَالَ ‏ ‏عِتْبَانُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ الرَّجُلَ يُعْجَلُ عَنْ امْرَأَتِهِ وَلَمْ ‏ ‏يُمْنِ ‏ ‏مَاذَا عَلَيْهِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا الْمَاءُ مِنْ الْمَاءِ

நான் ஒரு திங்கட்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ ஸாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இத்பான் பின் மாலிக் (ரலி) வீட்டு வாசலுக்குச் சென்று நின்று அவர்களை உரத்து அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) தமது கீழாடையை இழுத்தபடி (அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாம் இவரை அவசரப் படுத்தி விட்டோமே!” என்று கூறினார்கள்.

அப்போது இத்பான் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (உடலுறவின்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியை விட்டகல அவசரப் படுத்தப்பட்ட ஒருவருக்கான சட்டம் என்னவென்று கூறுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 20, ஹதீஸ் எண்: 517

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي يَعْقُوبَ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ بْنِ سَعْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْحَسَنِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ ‏ ‏قَالَ ‏:‏

‏أَرْدَفَنِي ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ خَلْفَهُ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبَّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِحَاجَتِهِ ‏ ‏هَدَفٌ ‏ ‏أَوْ ‏ ‏حَائِشُ ‏ ‏نَخْلٍ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ أَسْمَاءَ ‏ ‏فِي حَدِيثِهِ ‏ ‏يَعْنِي حَائِطَ نَخْلٍ ‏

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு சென்றபோது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை எந்த மனிதரிடமும் சொல்ல மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இயற்கைத் தேவைக்காக ஒதுங்கும் மறைவிடங்களிலேயே மேடுகள் நிறைந்த ஒதுக்குப்புறம் அல்லது பேரீச்சந் தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி)


குறிப்பு :

இப்னு அஸ்மா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘ஹாயிஷு நக்லு’ என்பதற்கு, அடர்ந்த பேரீச்சந் தோட்டம் என்பதாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 516

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ حَكِيمِ بْنِ عَبَّادِ بْنِ حُنَيْفٍ الْأَنْصَارِيُّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو أُمَامَةَ بْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ ‏ ‏قَالَ ‏:‏

‏أَقْبَلْتُ بِحَجَرٍ أَحْمِلُهُ ثَقِيلٍ وَعَلَيَّ ‏ ‏إِزَارٌ ‏ ‏خَفِيفٌ قَالَ فَانْحَلَّ إِزَارِي ‏ ‏وَمَعِيَ الْحَجَرُ لَمْ أَسْتَطِعْ أَنْ أَضَعَهُ حَتَّى بَلَغْتُ بِهِ إِلَى مَوْضِعِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ارْجِعْ إِلَى ثَوْبِكَ فَخُذْهُ وَلَا تَمْشُوا عُرَاةً ‏

நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தேன். அப்போது என் இடுப்பில் ஒரு மெல்லிய கீழாடை மட்டுமே இருந்தது. அதுவும் அவிழ்ந்து விழுந்துவிட்டது; என்னிடமோ பெரிய கல். என்னால் அதை இறக்கி வைக்க முடியாமல், சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “திரும்பிச் சென்று (அவிழ்ந்து விழுந்த) உமது ஆடையை எடுத்து (உடுத்தி)க் கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 515

و حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَكَرِيَّاءُ بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يُحَدِّثُ ‏:‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَنْقُلُ مَعَهُمْ الْحِجَارَةَ ‏ ‏لِلْكَعْبَةِ ‏ ‏وَعَلَيْهِ إِزَارُهُ فَقَالَ لَهُ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏عَمُّهُ يَا ابْنَ أَخِي لَوْ حَلَلْتَ إِزَارَكَ فَجَعَلْتَهُ عَلَى مَنْكِبِكَ دُونَ الْحِجَارَةِ قَالَ فَحَلَّهُ فَجَعَلَهُ عَلَى مَنْكِبِهِ فَسَقَطَ مَغْشِيًّا عَلَيْهِ قَالَ فَمَا رُئِيَ بَعْدَ ذَلِكَ الْيَوْمِ عُرْيَانًا ‏

(கஅபாவைப் புதுப்பிக்கும்போது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு கீழாடை மட்டுமே அணிந்திருந்தார்கள். அவர்களுடைய சிறிய தந்தையான அப்பாஸ் (ரலி), “என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் கீழாடையை அவிழ்த்து, உங்கள் தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக் கொள்ளலாமே!” என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள் மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 19, ஹதீஸ் எண்: 514

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ :‏ ‏

‏لَمَّا بُنِيَتْ ‏ ‏الْكَعْبَةُ ‏ ‏ذَهَبَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَعَبَّاسٌ ‏ ‏يَنْقُلَانِ حِجَارَةً فَقَالَ ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اجْعَلْ ‏ ‏إِزَارَكَ ‏ ‏عَلَى ‏ ‏عَاتِقِكَ ‏ ‏مِنْ الْحِجَارَةِ فَفَعَلَ ‏ ‏فَخَرَّ ‏ ‏إِلَى الْأَرْضِ ‏ ‏وَطَمَحَتْ ‏ ‏عَيْنَاهُ إِلَى السَّمَاءِ ثُمَّ قَامَ فَقَالَ ‏ ‏إِزَارِي ‏ ‏إِزَارِي فَشَدَّ عَلَيْهِ ‏ ‏إِزَارَهُ ‏


‏قَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏فِي رِوَايَتِهِ عَلَى رَقَبَتِكَ وَلَمْ يَقُلْ عَلَى عَاتِقِكَ ‏

கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்டபோது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி), நபி (ஸல்) அவர்களை நோக்கி, “கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது கீழாடையை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு மயக்கம் தீர்ந்து எழுந்தவுடன், “என் கீழாடை, என் கீழாடை” என்றார்கள். கீழாடை (எடுத்துக் கொடுக்கப் பட்டவுடன்) அதனை இறுக்கிக் கட்டிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “உமது தோளில்” என்பதற்குப் பகரமாக “உமது பிடரியில்” என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 18, ஹதீஸ் எண்: 513

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏:‏

وَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏يَغْتَسِلُونَ عُرَاةً يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى سَوْأَةِ بَعْضٍ وَكَانَ ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏يَغْتَسِلُ وَحْدَهُ فَقَالُوا وَاللَّهِ مَا يَمْنَعُ ‏ ‏مُوسَى ‏ ‏أَنْ يَغْتَسِلَ مَعَنَا إِلَّا أَنَّهُ آدَرُ قَالَ فَذَهَبَ مَرَّةً يَغْتَسِلُ فَوَضَعَ ثَوْبَهُ عَلَى حَجَرٍ فَفَرَّ الْحَجَرُ بِثَوْبِهِ قَالَ ‏ ‏فَجَمَحَ ‏ ‏مُوسَى ‏ ‏بِإِثْرِهِ يَقُولُ ثَوْبِي حَجَرُ ثَوْبِي حَجَرُ حَتَّى نَظَرَتْ ‏ ‏بَنُو إِسْرَائِيلَ ‏ ‏إِلَى سَوْأَةِ ‏ ‏مُوسَى ‏ ‏قَالُوا وَاللَّهِ مَا ‏ ‏بِمُوسَى ‏ ‏مِنْ بَأْسٍ فَقَامَ الْحَجَرُ حَتَّى نُظِرَ إِلَيْهِ قَالَ فَأَخَذَ ثَوْبَهُ فَطَفِقَ بِالْحَجَرِ ضَرْبًا


قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏وَاللَّهِ إِنَّهُ بِالْحَجَرِ نَدَبٌ سِتَّةٌ أَوْ سَبْعَةٌ ضَرْبُ ‏ ‏مُوسَى ‏ ‏بِالْحَجَرِ ‏

பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார், ஒருவர் மற்றவரது இன உறுப்பைப் பார்க்கும் நிலையில் பிறந்தமேனியுடன் (கூட்டாகக்) குளிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். மூஸா (அலை) எப்போதும் தனியாகவே குளிப்பார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! விதைவீக்க நோயாளியாய் இருப்பதனால்தான் மூஸா நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை” என்று அம்மக்கள் கேலி பேசினர். ஒருமுறை மூஸா (அலை) குளிக்கப் போனபோது தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்(து விட்டுக் குளித்)தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூஸா (அலை) அதைப் பின்தொடர்ந்து “கல்லே, எனது துணி; கல்லே, எனது துணி!” என்று கூறியவாறு விரைந்து ஓடி, (இறுதியாக பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு) வந்தபோது மூஸா (அலை) அவர்களது இன உறுப்பை அவர்கள் பார்த்து விட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸாவுக்கு எந்தக் குறையுமில்லை” என்று கூறினர். மூஸா (அலை) (நிர்வாணமாகப்) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் நின்றது. உடனே மூஸா (அலை) தமது ஆடையை எடுத்துக் கொண்டு அந்தக் கல்லை (த் தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

“அல்லாஹ்வின் மீதாணையாக! மூஸா (அலை) கல்லின் மீது அடித்ததில் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்து விட்டன” என்று இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) (கூடுதலாகக்) கூறுகின்றார்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த பல ஹதீஸ்களுள் இதுவும் ஒன்று” என்று ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 3, பாடம்: 17, ஹதீஸ் எண்: 512

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ الْحُبَابِ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏:‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا ‏ ‏يُفْضِي ‏ ‏الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلَا ‏ ‏تُفْضِي ‏ ‏الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ ‏


‏و حَدَّثَنِيهِ ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي فُدَيْكٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَا ‏ ‏مَكَانَ عَوْرَةِ عُرْيَةِ الرَّجُلِ وَعُرْيَةِ الْمَرْأَةِ ‏

“ஓர் ஆண், மற்றோர் ஆணின் இன உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண், மற்றொரு பெண்ணின் இன உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இபுனு அபீ ஃபுதைக் (ரஹ்) வழி அறிவிப்பில், “இன உறுப்பை” என்பதற்குப் பகரமாக, “நிர்வாணத்தை” எனும் சொல் ஆளப் பட்டுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 511

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُوسَى الْقَارِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏وَضَعْتُ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَاءً وَسَتَرْتُهُ فَاغْتَسَلَ ‏

“நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்து விட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக் கொண்டேன்; அவர்கள் குளித்தார்கள்” என மைமூனா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 510

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏عَقِيلٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏حَدَّثَتْهُ :‏

أَنَّهُ ‏‏لَمَّا كَانَ عَامُ الْفَتْحِ أَتَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ بِأَعْلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى غُسْلِهِ فَسَتَرَتْ عَلَيْهِ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏ثُمَّ أَخَذَ ثَوْبَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ صَلَّى ثَمَانَ رَكَعَاتٍ ‏ ‏سُبْحَةَ ‏ ‏الضُّحَى ‏


‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَ فَسَتَرَتْهُ ابْنَتُهُ ‏ ‏فَاطِمَةُ ‏ ‏بِثَوْبِهِ فَلَمَّا اغْتَسَلَ أَخَذَهُ فَالْتَحَفَ بِهِ ثُمَّ قَامَ فَصَلَّى ثَمَانَ سَجَدَاتٍ وَذَلِكَ ضُحًى ‏

நான் மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி), திரையிட்டு மறைத்தார். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக் கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த்தி அபீதாலிப் (ரலி)


குறிப்பு :

ஸயீத் பின் அபில் ஹிந்த் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக் கொண்டார். குளித்து முடிந்தபின் அந்த ஆடையை வாங்கி நபி (ஸல்) போர்த்திக் கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும்” என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 16, ஹதீஸ் எண்: 509

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا مُرَّةَ ‏ ‏مَوْلَى ‏ ‏أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ ‏ ‏أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ ‏ ‏تَقُولُ ‏:‏

‏ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏وَفَاطِمَةُ ‏ ‏ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ ‏

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை, அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக் கொண்டிருந்தார்.

அறிவிப்பாளர் : உம்மு ஹானீ பின்த்தி அபீதாலிப் (ரலி)