அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2991

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ أَخْبَرَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ : ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّمَا الرِّبَا فِي ‏ ‏النَّسِيئَةِ

“வட்டி என்பதே கடனில்தான்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2990

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ عَبَّادٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏يَقُولُ : ‏

الدِّينَارُ بِالدِّينَارِ وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ مِثْلًا بِمِثْلٍ مَنْ زَادَ أَوْ ازْدَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏فَقُلْتُ لَهُ إِنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏يَقُولُ غَيْرَ هَذَا فَقَالَ لَقَدْ لَقِيتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقُلْتُ أَرَأَيْتَ هَذَا الَّذِي تَقُولُ أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَوْ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فَقَالَ لَمْ أَسْمَعْهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَلَمْ أَجِدْهُ فِي كِتَابِ اللَّهِ وَلَكِنْ حَدَّثَنِي ‏ ‏أُسَامَةُ بْنُ زَيْدٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الرِّبَا فِي ‏ ‏النَّسِيئَةِ

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), “தங்க நாணயத்திற்குத் தங்க நாணயத்தையும் வெள்ளி நாணயத்திற்கு வெள்ளி நாணயத்தையும் சரிக்குச் சமமாக விற்கலாம். கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அவர் வட்டி வாங்கிவிட்டார்” என்று கூறியதை நான் செவியுற்றபோது நான், “இப்னு அப்பாஸ் (ரலி) வேறு விதமாகக் கூறுகிறார்களே?” என்று கேட்டேன். அதற்கு அபூஸயீத் (ரலி) “நான் இப்னு அப்பாஸ் அவர்களைச் சந்தித்த போது, நீங்கள் கூறுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா, அல்லது இறைவேதத்தில் கண்டீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவ்வாறு நான் செவியுறவுமில்லை; இறைவேதத்தில் அதை நான் காணவுமில்லை. மாறாக, ‘வட்டி என்பது கடனுக்கு(நாணயமாற்று செய்யும்போது)தான்’ என்று நபி (ஸல்) கூறியதாக உஸாமா பின் ஸைத் (ரலி) என்னிடம் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூஸாலிஹ் அஸ்ஸய்யாத் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2989

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ : ‏

سَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏وَابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَلَمْ يَرَيَا بِهِ بَأْسًا فَإِنِّي لَقَاعِدٌ عِنْدَ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏فَسَأَلْتُهُ عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ مَا زَادَ فَهُوَ رِبًا فَأَنْكَرْتُ ذَلِكَ لِقَوْلِهِمَا ‏ ‏فَقَالَ لَا أُحَدِّثُكَ إِلَّا مَا ‏
‏سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَهُ صَاحِبُ نَخْلِهِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏مِنْ تَمْرٍ طَيِّبٍ وَكَانَ تَمْرُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَذَا اللَّوْنَ فَقَالَ لَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّى لَكَ هَذَا قَالَ انْطَلَقْتُ ‏ ‏بِصَاعَيْنِ ‏ ‏فَاشْتَرَيْتُ بِهِ هَذَا الصَّاعَ فَإِنَّ سِعْرَ هَذَا فِي السُّوقِ كَذَا وَسِعْرَ هَذَا كَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ أَرْبَيْتَ إِذَا أَرَدْتَ ذَلِكَ فَبِعْ تَمْرَكَ بِسِلْعَةٍ ثُمَّ اشْتَرِ بِسِلْعَتِكَ أَيَّ تَمْرٍ شِئْتَ ‏
‏قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏فَالتَّمْرُ بِالتَّمْرِ أَحَقُّ أَنْ يَكُونَ رِبًا أَمْ الْفِضَّةُ بِالْفِضَّةِ ‏ ‏قَالَ ‏ ‏فَأَتَيْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏بَعْدُ ‏ ‏فَنَهَانِي وَلَمْ آتِ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏أَبُو الصَّهْبَاءِ ‏ ‏أَنَّهُ سَأَلَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْهُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَكَرِهَهُ

நான் இப்னு உமர் (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் நாணயமாற்று வணிகம் பற்றிக் கேட்டேன். அவ்விருவரும் அதைக் குற்றமாகக் கருதவில்லை. பின்னர் நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, நாணயமாற்று பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அபூஸயீத் (ரலி), “கூடுதலாக வருபவை வட்டியாகும்” என்றார்கள். இரு(மேற்சொன்ன)வரும் (வேறு விதமாக) கூறியிருந்ததால், நான் அபூஸயீத் (ரலி) கருத்தை ஆட்சேபித்தேன்.

அப்போது அபூஸயீத் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் உம்மிடம் அறிவிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் பேரீச்ச மரத் தோட்டக்காரர் ஒரு ‘ஸாஉ’ சிறந்த வகை பேரீச்சம் பழத்துடன் வந்தார். நபி (ஸல்) அவர்களது பேரீச்சம் பழம் தரம் குறைந்த (நாட்டு ரகப்) பழமாக இருந்தது.

ஆகவே, நபி (ஸல்) தம் தோட்டக்காரரிடம், “இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “நான் (நம்முடைய பேரீச்சம் பழங்களில்) இரண்டு ‘ஸாஉ’களுடன் சென்று, அதற்குப் பதிலாக இந்த (சிறந்த வகை பழத்தின்) ஒரு ‘ஸாஉ’வை வாங்கி வந்தேன். கடைத் தெருவில் இந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு; அந்தப் பேரீச்சம் பழத்தின் விலை இவ்வளவு” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்குக் கேடுதான்; நீ வட்டி வியாபாரம் செய்துவிட்டாய். இ(ந்த சிறந்த வகை பழத்)தை நீ விரும்பினால், உனது பேரீச்சம் பழத்தை (வேறு) ஏதேனும் ஒரு பொருளுக்காக விற்றுவிட்டு, பிறகு அந்தப் பொருளுக்குப் பதிலாக நீ விரும்பும் எந்தப் பேரீச்சம் பழத்தை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்” என்றார்கள்.

அபூஸயீத் (ரலி), “(தரம் குறைந்த) பேரீச்சம் பழத்தை, (தரம் கூடிய) பேரீச்சம் பழத்திற்கு விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?, (தரம் குறைந்த) வெள்ளியை, (தரம் கூடிய) வெள்ளிக்கு விற்பது வட்டியாக இருக்க அதிகத் தகுதியுடையதா?” என்று கேட்டார்கள். பின்னர் நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, ‘அவ்வாறு விற்க வேண்டாம்’ என அவர்கள் என்னைத் தடுத்தார்கள். பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லவில்லை; (ஆயினும்,) அபுஸ்ஸஹ்பா (ரஹ்), “நான் மக்காவில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அதை வெறுக்கத் தக்கதாகக் கருதினார்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2988

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏قَالَ : ‏

سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ أَيَدًا بِيَدٍ قُلْتُ نَعَمْ قَالَ فَلَا بَأْسَ بِهِ فَأَخْبَرْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏فَقُلْتُ إِنِّي سَأَلْتُ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الصَّرْفِ ‏ ‏فَقَالَ أَيَدًا بِيَدٍ قُلْتُ نَعَمْ قَالَ فَلَا بَأْسَ بِهِ قَالَ ‏ ‏أَوَ قَالَ ذَلِكَ إِنَّا سَنَكْتُبُ إِلَيْهِ فَلَا ‏ ‏يُفْتِيكُمُوهُ ‏
‏قَالَ فَوَاللَّهِ لَقَدْ جَاءَ بَعْضُ فِتْيَانِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِتَمْرٍ فَأَنْكَرَهُ فَقَالَ كَأَنَّ هَذَا لَيْسَ مِنْ تَمْرِ أَرْضِنَا قَالَ كَانَ فِي تَمْرِ أَرْضِنَا أَوْ فِي تَمْرِنَا الْعَامَ بَعْضُ الشَّيْءِ فَأَخَذْتُ هَذَا وَزِدْتُ بَعْضَ الزِّيَادَةِ فَقَالَ ‏ ‏أَضْعَفْتَ أَرْبَيْتَ لَا تَقْرَبَنَّ هَذَا إِذَا ‏ ‏رَابَكَ ‏ ‏مِنْ تَمْرِكَ شَيْءٌ فَبِعْهُ ثُمَّ اشْتَرِ الَّذِي تُرِيدُ مِنْ التَّمْرِ

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் பற்றி வினவினேன். அப்போது அவர்கள் “உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அதற்கு அவர்கள், “அவ்வாறாயின் குற்றமில்லை” என்றார்கள்.

பிறகு அபூஸயீத் (ரலி) அவர்களிடம் நான் இதைத் தெரிவித்தேன். “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வணிகம் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘உடனுக்குடன் மாற்றிக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ‘அவ்வாறாயின் குற்றமில்லை’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றேன். அபூஸயீத் (ரலி), “அவ்வாறா சொன்னார்கள்? நாம் அவருக்குக் கடிதம் எழுதுகிறோம். இனி அவ்வாறு உங்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டார்” என்று கூறிவிட்டு,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஊழியர்களில் ஒருவர், ஒரு வகைப் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அந்தப் பழங்களை அந்நியமாகக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘இது நமது மண்ணில் விளையும் பேரீச்சம் பழங்கள் இல்லை போலிருக்கிறதே?’ என்று கேட்டார்கள். அவர், ‘இந்த ஆண்டு நமது மண்ணில் – நமது பேரீச்சம் பழங்களில் – சில (தரம் குறைந்தவை) இருந்தன. எனவே, அவற்றையும் அவற்றுடன் இன்னும் சிறிதளவு கூடுதல் பழத்தையும் கொடுத்து, (தரமான) இந்தப் பழத்தைப் பெற்றேன்’ என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘கூடுதலாகக் கொடுத்துவிட்டாய்; வட்டியாக்கிவிட்டாய். இதை நமக்கு அருகில் கொண்டுவர வேண்டாம். உன்னுடைய பேரீச்சம் பழங்கள் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதை (விலைக்கு) விற்றுவிட்டு, பின்னர் (அந்தத் தொகையை வைத்து) நீ விரும்புகின்ற(பேரீச்சம் பழ இனத்)தை வாங்கிக்கொள்’ என்று கூறினார்கள்” என்று அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) எடுத்துரைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) வழியாக அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2987

‏حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ : ‏

كُنَّا نُرْزَقُ تَمْرَ ‏ ‏الْجَمْعِ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏الْخِلْطُ ‏ ‏مِنْ التَّمْرِ فَكُنَّا نَبِيعُ ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا ‏ ‏صَاعَيْ ‏ ‏تَمْرٍ بِصَاعٍ وَلَا صَاعَيْ حِنْطَةٍ بِصَاعٍ وَلَا دِرْهَمَ بِدِرْهَمَيْنِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் தரம் குறைந்த பேரீச்சம் பழங்கள் எங்களுக்கு வழங்கப்படும். அவை கலப்புப் பேரீச்சம் பழங்களாகும். அவற்றில் இரண்டு ‘ஸாஉ’களுக்கு ஒரு ‘ஸாஉ’ (தரமான பேரீச்சம் பழம்) என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்து வந்தோம். இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “ஒரு ‘ஸாஉ’க்கு இரண்டு ‘ஸாஉ’கள் பேரீச்சம் பழங்கள் (பண்டமாற்று) கூடாது; ஒரு ஸாஉக்கு இரண்டு ‘ஸாஉ’கள் கோதுமை (பண்டமாற்று) கூடாது; இரண்டு வெள்ளி திர்ஹங்களுக்கு ஒரு வெள்ளி திர்ஹமும் கூடாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2986

و حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَزَعَةَ الْبَاهِلِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ : ‏

أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِتَمْرٍ فَقَالَ مَا هَذَا التَّمْرُ مِنْ تَمْرِنَا فَقَالَ الرَّجُلُ يَا رَسُولَ اللَّهِ بِعْنَا تَمْرَنَا ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ ‏ ‏مِنْ هَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏هَذَا الرِّبَا فَرُدُّوهُ ثُمَّ بِيعُوا تَمْرَنَا وَاشْتَرُوا لَنَا مِنْ هَذَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டன. அப்போது அவர்கள், “இது நம் பேரீச்சம் பழங்கள் போல் இல்லையே!” என்று கேட்டார்கள். அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! நம் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்துவிட்டு, இ(ந்தத் தரமான பேரீச்சம் பழத்)தில் ஒரு ‘ஸாஉ’ வாங்கினோம்” என்று (பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்த) அந்த மனிதர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது வட்டியாகும். இதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்; பிறகு நமது பேரீச்சம் பழத்தை (விலைக்கு) விற்றுவிட்டு, (அந்தத் தொகையின் மூலம்) நமக்காக இந்தப் பேரீச்சம் பழத்தை வாங்குங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2985

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُمَا جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ حَسَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏يَقُولُ : ‏

جَاءَ ‏ ‏بِلَالٌ ‏ ‏بِتَمْرٍ ‏ ‏بَرْنِيٍّ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ أَيْنَ هَذَا فَقَالَ ‏ ‏بِلَالٌ ‏ ‏تَمْرٌ كَانَ عِنْدَنَا رَدِيءٌ فَبِعْتُ مِنْهُ ‏ ‏صَاعَيْنِ ‏ ‏بِصَاعٍ لِمَطْعَمِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ عِنْدَ ذَلِكَ ‏ ‏أَوَّهْ عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ التَّمْرَ فَبِعْهُ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِ بِهِ ‏


لَمْ يَذْكُرْ ‏ ‏ابْنُ سَهْلٍ ‏ ‏فِي حَدِيثِهِ عِنْدَ ذَلِكَ

பிலால் (ரலி) உயர் ரக பர்னீ பேரீச்சம் பழங்களுடன் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி), “என்னிடம் தரம் குறைந்த பேரீச்சம் பழங்கள் இருந்தன; நபி (ஸல்) அவர்களின் உணவுக்காக அதில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து இ(ந்தத் தரமான பேரீச்சம் பழத்)தில் ஒரு ‘ஸாஉ’ வாங்கினேன்” என்றார்.

இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆ! இது யதார்த்தத்தில் வட்டியாகும்! இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இந்த(தரமான)ப் பேரீச்சம் பழத்தை வாங்க விரும்பினால் உங்களிடமுள்ள அ(ந்தத் தரம் குறைந்த பேரீச்சம் பழத்)தைத் தனியாக (விலைக்கு) விற்றுவிட்டு, பிறகு அந்தத் தொகையின் மூலம் (தரமான பேரீச்சம் பழத்தை) வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஸஹ்லு அத்தமீமீ (ரஹ்) வழி அறிவிப்பில் “ இதைக் கேட்டவுடன்…“  எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2984

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏وَعَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏اسْتَعْمَلَ ‏ ‏رَجُلًا ‏ ‏عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَجَاءَهُ بِتَمْرٍ ‏ ‏جَنِيبٍ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكُلُّ تَمْرِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏هَكَذَا فَقَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ ‏ ‏الصَّاعَ ‏ ‏مِنْ هَذَا ‏ ‏بِالصَّاعَيْنِ ‏ ‏وَالصَّاعَيْنِ ‏ ‏بِالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَا تَفْعَلْ بِعْ ‏ ‏الْجَمْعَ ‏ ‏بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ ‏ ‏جَنِيبًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்(து அனுப்பிவைத்)தார்கள். அவர் (திரும்பி வரும்போது) தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படி (உயர் தரமானதாக)த்தான் இருக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தரம் குறைந்த பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ‘ஸாஉ’ இந்தப் பழம் வாங்குகின்றோம்; அல்லது தரம் குறைந்த பேரீச்சம் பழங்களில் மூன்று ‘ஸாஉ’கள் கொடுத்து, (தரமான பேரீச்சம் பழங்களில்) இரண்டு ‘ஸாஉ’கள் வாங்குகின்றோம்” என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்! தரம் குறைந்த பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு, அந்த வெள்ளிக் காசுகளுக்குத் தரமான பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2983

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ ‏ ‏يُحَدِّثُ أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَأَبَا سَعِيدٍ ‏ ‏حَدَّثَاهُ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ ‏ ‏أَخَا ‏ ‏بَنِي عَدِيٍّ الْأَنْصَارِيَّ ‏ ‏فَاسْتَعْمَلَهُ عَلَى ‏ ‏خَيْبَرَ ‏ ‏فَقَدِمَ بِتَمْرٍ ‏ ‏جَنِيبٍ ‏ ‏فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَكُلُّ تَمْرِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏هَكَذَا قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَشْتَرِي ‏ ‏الصَّاعَ ‏ ‏بِالصَّاعَيْنِ ‏ ‏مِنْ ‏ ‏الْجَمْعِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَفْعَلُوا وَلَكِنْ مِثْلًا بِمِثْلٍ أَوْ بِيعُوا هَذَا وَاشْتَرُوا بِثَمَنِهِ مِنْ هَذَا وَكَذَلِكَ الْمِيزَانُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பனூ அதீ அல்அன்ஸாரீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக நியமித்து அனுப்பிவைத்தார்கள். அவர் (திரும்பி வரும்போது) தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கைபரின் பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இப்படித்தான் இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தரம் குறைந்த பேரீச்சம் பழத்தில் இரண்டு ‘ஸாஉ’களைக் கொடுத்துவிட்டு, (தரமான பேரீச்சம் பழத்தில்) ஒரு ‘ஸாஉ’ வாங்குவோம்” என்று சொன்னார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறு செய்யாதீர்கள். (உணவுப் பொருளை) சரிக்குச் சமமாகவே வாங்குங்கள். அல்லது (தரம் குறைந்த உங்கள்) பேரீச்சம் பழத்தை (விலைக்கு) விற்றுவிட்டு, அந்தத் தொகைக்கு அ(ந்தத் தரமான பழத்)தை வாங்குங்கள். இவ்வாறு(முகத்தல் அளவை போலத்)தான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா (ரலி) & அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 18, ஹதீஸ் எண்: 2982

‏حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ مَعْرُوفٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏بُسْرَ بْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏مَعْمَرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّهُ أَرْسَلَ غُلَامَهُ ‏ ‏بِصَاعِ ‏ ‏قَمْحٍ فَقَالَ بِعْهُ ثُمَّ اشْتَرِ بِهِ شَعِيرًا فَذَهَبَ الْغُلَامُ فَأَخَذَ ‏ ‏صَاعًا ‏ ‏وَزِيَادَةَ بَعْضِ ‏ ‏صَاعٍ ‏ ‏فَلَمَّا جَاءَ ‏ ‏مَعْمَرًا ‏ ‏أَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ لَهُ ‏ ‏مَعْمَرٌ ‏ ‏لِمَ فَعَلْتَ ذَلِكَ انْطَلِقْ فَرُدَّهُ وَلَا تَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ : ‏

فَإِنِّي كُنْتُ‏ ‏أَسْمَعُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏الطَّعَامُ بِالطَّعَامِ مِثْلًا بِمِثْلٍ قَالَ وَكَانَ طَعَامُنَا يَوْمَئِذٍ الشَّعِيرَ قِيلَ لَهُ فَإِنَّهُ لَيْسَ بِمِثْلِهِ قَالَ إِنِّي أَخَافُ أَنْ ‏ ‏يُضَارِعَ

மஅமர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஒரு ‘ஸாஉ’ கோதுமையைத் தம் அடிமையிடம் கொடுத்து, “இதை விற்றுவிட்டு அந்தக் காசைக் கொண்டு பார்லி வாங்கி வா” என்று அனுப்பினார்கள். அந்த அடிமை சென்று, அதைக் கொடுத்து ஒரு ‘ஸாஉ’ பார்லியும் சற்றுக் கூடுதலாகவும் பெற்றுவந்து மஅமர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தார்.

அதற்கு மஅமர் (ரலி), “ஏன் அவ்வாறு செய்தாய்? நீ சென்று (கூடுதலாகப் பெற்ற) அதைத் திருப்பிக் கொடுத்துவிடு. சரிக்குச் சரியாகவே தவிர (உணவுப் பொருளை) வாங்காதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘சரிக்குச் சரியாகவே உணவுப் பொருள், உணவுப் பொருளுக்கு (விற்கப்படும்)’ என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்’ என்றார்கள்.

மேலும் மஅமர் (ரலி), “அன்றைய நாளில் பார்லி எங்கள் உணவாக இருந்தது” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் “இது, அதைப் போன்று (ஒரே இனமாக) இல்லையே?” என்று (சமாதானம்) கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “அது ஒன்றுக்கொன்று ஒப்பானதாக இருக்குமோ என நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : மஅமர் (ரலி) வழியாக புஸ்ரு பின் ஸயீத்  (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸிலும் இதுபோன்ற ஹதீஸ்களிலும் விற்பது’, ‘வாங்குவதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் அக்காலத்தில் நடைமுறையிலிருந்த பண்டமாற்று வணிகத்தையே குறிக்கும்.