அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2981

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ ‏ ‏وَعَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏وَغَيْرِهِمَا ‏ ‏أَنَّ ‏ ‏عَامِرَ بْنَ يَحْيَى الْمَعَافِرِيَّ ‏ ‏أَخْبَرَهُمْ عَنْ ‏ ‏حَنَشٍ ‏ ‏أَنَّهُ قَالَ : ‏‏

كُنَّا مَعَ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏فِي غَزْوَةٍ ‏ ‏فَطَارَتْ ‏ ‏لِي وَلِأَصْحَابِي قِلَادَةٌ فِيهَا ذَهَبٌ ‏ ‏وَوَرِقٌ ‏ ‏وَجَوْهَرٌ فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهَا فَسَأَلْتُ ‏ ‏فَضَالَةَ بْنَ عُبَيْدٍ ‏ ‏فَقَالَ انْزِعْ ذَهَبَهَا فَاجْعَلْهُ فِي كِفَّةٍ وَاجْعَلْ ذَهَبَكَ فِي كِفَّةٍ ثُمَّ لَا تَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ ‏ ‏فَإِنِّي ‏‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَأْخُذَنَّ إِلَّا مِثْلًا بِمِثْلٍ

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ஒரு போரில் இருந்தோம். எனக்கும் என் தோழர்களுக்கும் (போர்ச் செல்வத்தின் பங்காக) தங்க மாலை ஒன்று கிடைத்தது. அதில் பொன், வெள்ளி, மாணிக்கக் கற்கள் ஆகியன பதித்திருந்தன. அதை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். எனவே, ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.

அப்போது அவர்கள், மாலையிலுள்ள தங்கத்தைத் தனியே எடுத்து, அதைத் தராசின் ஒரு தட்டிலும், உனது தங்கத்தை மற்றொரு தட்டிலும் வைப்பீராக. பிறகு சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) நீ (தங்கத்தைத் தங்கத்திற்கு) பெற்றுக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில் தங்கத்தைத் தங்கத்திற்கும் வெள்ளியை வெள்ளிக்கும்) பெற வேண்டாம்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக ஹனஷ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2980

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْجُلَاحِ أَبِي كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَنَشٌ الصَّنْعَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏قَالَ : ‏

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏نُبَايِعُ ‏ ‏الْيَهُودَ ‏ ‏الْوُقِيَّةَ ‏ ‏الذَّهَبَ بِالدِّينَارَيْنِ وَالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلَّا وَزْنًا بِوَزْنٍ

நாங்கள் கைபர் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது, (பொன்னும் மணியும் பதித்த) தங்க ஊக்கியாவை இரண்டு மூன்று தீனார்களுக்கு யூதர்களிடம் விற்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எடைக்கு எடை சரியாகவே தவிர (வேறு முறையில்) தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2979

‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي شُجَاعٍ سَعِيدِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ أَبِي عِمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏حَنَشٍ الصَّنْعَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏فَضَالَةَ بْنِ عُبَيْدٍ ‏ ‏قَالَ : ‏

اشْتَرَيْتُ يَوْمَ ‏ ‏خَيْبَرَ ‏ ‏قِلَادَةً بِاثْنَيْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنْ اثْنَيْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَا تُبَاعُ حَتَّى تُفَصَّلَ ‏


حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ مُبَارَكٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَزِيدَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

நான் கைபர் போர் நாளில் பன்னிரண்டு தீனாருக்கு ஒரு கழுத்து மாலையை வாங்கினேன். அதில் பொன்னும் மணிகளும் (பதித்து) இருந்தன. அவற்றை நான் தனித் தனியே பிரித்தெடுத்தேன். அவை பன்னிரண்டு தீனாரைவிடக் கூடுதல் மதிப்புடையவையாக இருப்பதைக் கண்டேன். ஆகவே, இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது, தனியே பிரித்தெடுக்காமல் (பொன்னும் மணியும் பதித்த ஆபரணங்கள்) விற்கப்படக் கூடாது” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2978

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عُلَيَّ بْنَ رَبَاحٍ اللَّخْمِيَّ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏فَضَالَةَ بْنَ عُبَيْدٍ الْأَنْصَارِيَّ ‏ ‏يَقُولُ : ‏

أُتِيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ ‏ ‏بِخَيْبَرَ ‏ ‏بِقِلَادَةٍ فِيهَا خَرَزٌ وَذَهَبٌ وَهِيَ مِنْ الْمَغَانِمِ تُبَاعُ فَأَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالذَّهَبِ الَّذِي فِي الْقِلَادَةِ فَنُزِعَ وَحْدَهُ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபரில் இருந்தபோது, அவர்களிடம் கழுத்து மாலை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் பொன்னும் மணியும் (பதித்து) இருந்தன. அது போர்ச் செல்வங்களுடன் விற்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த மாலையில் இருந்த தங்கத்தைத் தனியே கழற்றி எடுத்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். பிறகு மக்களிடம் “எடைக்கு எடை தங்கத்தைத் தங்கத்திற்கு விற்கலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஃபளாலா பின் உபைத் அல்அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2977

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ : ‏

نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْفِضَّةِ بِالْفِضَّةِ وَالذَّهَبِ بِالذَّهَبِ إِلَّا سَوَاءً بِسَوَاءٍ وَأَمَرَنَا أَنْ نَشْتَرِيَ الْفِضَّةَ بِالذَّهَبِ كَيْفَ شِئْنَا وَنَشْتَرِيَ الذَّهَبَ بِالْفِضَّةِ كَيْفَ شِئْنَا قَالَ فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ يَدًا بِيَدٍ فَقَالَ هَكَذَا سَمِعْتُ ‏


حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ صَالِحٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي إِسْحَقَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏أَبَا بَكْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏نَهَانَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்குச் சரியாகவே தவிர (வேறு முறையில்) விற்கக் கூடாது எனத் தடை விதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும், வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு வாங்குவதற்கும் அனுமதித்தார்கள்.

இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அறிவித்தபோது ஒருவர் (குறுக்கிட்டு), “உடனுக்குடன் (மாற்றிக்கொண்டால்தானே)!” என்று கேட்டார். அதற்கு அபூபக்ரா (ரலி), “ஆம், அவ்வாறுதான் நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூபக்ரா (ரலி)


குறிப்பு :

யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) வழி அறிவிப்பில் (பொதுவாக இல்லாமல்), “….. எங்களுக்குத் தடை விதித்தார்கள்” எனக் குறிப்பாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2976

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا الْمِنْهَالِ ‏ ‏يَقُولُ سَأَلْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏عَنْ الصَّرْفِ ‏ ‏فَقَالَ : ‏

سَلْ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَهُوَ أَعْلَمُ فَسَأَلْتُ ‏ ‏زَيْدًا ‏ ‏فَقَالَ سَلْ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏فَإِنَّهُ أَعْلَمُ ثُمَّ قَالَا ‏ ‏نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ بَيْعِ ‏ ‏الْوَرِقِ ‏ ‏بِالذَّهَبِ دَيْنًا

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அவர்கள், “நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேளும். அவர் (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், “நீர் பராஉ (ரலி) அவர்களிடமே கேளும். அவரே (என்னைவிட) நன்கு அறிந்தவர்” என்றார்கள். பின்னர் இருவரும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2975

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْمِنْهَالِ ‏ ‏قَالَ : ‏

بَاعَ شَرِيكٌ لِي ‏ ‏وَرِقًا ‏ ‏بِنَسِيئَةٍ ‏ ‏إِلَى الْمَوْسِمِ أَوْ إِلَى الْحَجِّ فَجَاءَ إِلَيَّ فَأَخْبَرَنِي فَقُلْتُ هَذَا أَمْرٌ لَا يَصْلُحُ قَالَ قَدْ بِعْتُهُ فِي السُّوقِ فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ فَأَتَيْتُ ‏ ‏الْبَرَاءَ بْنَ عَازِبٍ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْمَدِينَةَ ‏ ‏وَنَحْنُ نَبِيعُ هَذَا الْبَيْعَ فَقَالَ ‏ ‏مَا كَانَ يَدًا بِيَدٍ فَلَا بَأْسَ بِهِ وَمَا كَانَ ‏ ‏نَسِيئَةً ‏ ‏فَهُوَ رِبًا ‏ ‏وَائْتِ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ ‏ ‏فَإِنَّهُ أَعْظَمُ تِجَارَةً مِنِّي فَأَتَيْتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ مِثْلَ ذَلِكَ

என் கூட்டாளி ஒருவர், (தங்கத்திற்கு) வெள்ளியை ஹஜ் பருவம்வரை கடனுக்கு (நாணயமாற்று முறையில்) விற்றார். பின்னர் என்னிடம் வந்து அதைப் பற்றித் தெரிவித்தார். நான், “இது முறையாகாது” என்றேன். அவர், “அவ்வாறாயின் நான் கடைத் தெருவில் அதை விற்றபோது என்னிடம் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை” என்று சொன்னார். ஆகவே, நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றி (விளக்கம்) கேட்டேன்.

அதற்கு அவர்கள், “நபி (ஸல்) மதீனாவுக்கு(ப் புலம் பெயர்ந்து) வந்தபோது, நாங்கள் இதே வியாபாரத்தைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘உடனுக்குடன் (நாணயமாற்று) செய்துகொண்டால் குற்றமில்லை; (தங்கத்தை வெள்ளிக்கோ, வெள்ளியைத் தங்கத்திற்கோ) கடனாக மாற்றினால்தான் அது வட்டியாகும்’ என்று கூறினார்கள். நீர் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் போ(ய் விசாரி)! ஏனெனில், அவர் என்னைவிட பெரிய வணிகர் ஆவார்” என்றார்கள். அவ்வாறே நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டபோது, பராஉ (ரலி) கூறியதைப் போன்றே அவர்களும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபுல் மின்ஹால் அப்துர் ரஹ்மான் பின் முத்இம் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2974

‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ أَبِي تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ : ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏الدِّينَارُ بِالدِّينَارِ لَا ‏ ‏فَضْلَ ‏ ‏بَيْنَهُمَا وَالدِّرْهَمُ بِالدِّرْهَمِ لَا ‏ ‏فَضْلَ ‏ ‏بَيْنَهُمَا ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مَالِكَ بْنَ أَنَسٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ أَبِي تَمِيمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“தங்க நாணயத்தைத் தங்க நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்; வெள்ளி நாணயத்தை வெள்ளி நாணயத்திற்கு, அவற்றுக்கிடையே ஏற்றத்தாழ்வின்றி விற்கலாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

நாணயத்தை நாணயத்திற்கு ‘விற்பது’ என்பதை, சில்லரையாக ‘மாற்றிக்கொள்வது’ எனப் பொருள் கொள்ள வேண்டும். 100 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்து, 10 ரூபாய் நோட்டில் 10ஐப் பெற்றுக்கொள்வது என்பது, 100 ரூபாயை ‘விற்பது’ ஆகாது.

சில்லரை தட்டுப்பாடு ஏற்படும்போது சிலர், 100 ரூபாய்க்கு, சில்லரையாக 90 ரூபாய் மட்டும் கொடுப்பார்கள். இதுவே பணத்தைப் பணத்திற்கு விற்கும் வட்டியாகும்.

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2973

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ أَبِي نُعْمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الذَّهَبُ بِالذَّهَبِ وَزْنًا بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَزْنًا بِوَزْنٍ مِثْلًا بِمِثْلٍ فَمَنْ زَادَ أَوْ اسْتَزَادَ فَهُوَ رِبًا

“தங்கத்தைத் தங்கத்திற்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). வெள்ளியை வெள்ளிக்குச் சரிக்குச் சரியான எடைக்கு (விற்கலாம்). ஒருவர் கூடுதலாகக் கொடுத்தாலோ, கூடுதலாகக் கேட்டாலோ அது வட்டியாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 15, ஹதீஸ் எண்: 2972

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَوَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي زُرْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ : ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏التَّمْرُ بِالتَّمْرِ وَالْحِنْطَةُ بِالْحِنْطَةِ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلًا بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوْ اسْتَزَادَ فَقَدْ ‏ ‏أَرْبَى ‏ ‏إِلَّا مَا اخْتَلَفَتْ أَلْوَانُهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُحَارِبِيُّ ‏ ‏عَنْ ‏ ‏فُضَيْلِ بْنِ غَزْوَانَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ يَدًا بِيَدٍ

“பேரீச்சம் பழத்தைப் பேரீச்சம் பழத்திற்கும், கோதுமையைக் கோதுமைக்கும், பார்லியை பார்லிக்கும், உப்பை உப்புக்கும் சரிக்குச் சரியாக உடனுக்குடன் விற்கலாம். அவற்றின் இனங்கள் வேறுபட்டிருந்தால் தவிர, கூடுதலாகக் கொடுப்பவரோ கூடுதலாகக் கேட்பவரோ வட்டி வாங்கிவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அல் முஹாரிபீ (ரஹ்) வழி அறிவிப்பில், ‘உடனுக்குடன்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.