அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2872

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏


قَالَ ‏ ‏بُكَيْرٌ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُ ‏ ‏كُنَّا ‏ ‏نُكْرِي ‏ ‏أَرْضَنَا ثُمَّ تَرَكْنَا ذَلِكَ حِينَ سَمِعْنَا حَدِيثَ ‏ ‏رَافِعِ بْنِ خَدِيجٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்புகள் :

“நாங்கள் எங்கள் நிலங்களை (பழைய வழக்கத்தில்) குத்தகைக்கு விட்டுவந்தோம். பின்னர் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அறிவித்த (2883) ஹதீஸை நாங்கள் செவியுற்றபோது அதை விட்டுவிட்டோம்” என்று இப்னு உமர் (ரலி) சொல்லக் கேட்டிருக்கிறேன் என்பதாக நாஃபிஉ (ரஹ்) கூறினார்.

(நில உரிமையாளர், தம்முடைய நிலத்தில் உழைக்கும் விவசாயியிடம், விளைச்சல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட அளவு தானியத்தைத் தமக்குக் குத்தகைத் தொகைக்காகத் தந்துவிட வேண்டும் என்ற முன் நிபந்தனையுடன் நிலத்தைக் குத்தகைக்கு விடும் பழக்கம் அரபியர்களிடம் இருந்து வந்தது. அவ்வகைக் குத்தகை தடை செய்யப்பட்டது – ஹதீஸ் 2861இன் அடிக்குறிப்பு)

Share this Hadith: