அத்தியாயம்: 21, பாடம்: 19, ஹதீஸ் எண்: 2887

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏حَنْظَلَةَ بْنِ قَيْسٍ ‏ ‏أَنَّهُ سَأَلَ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏ ‏فَقَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏كِرَاءِ ‏ ‏الْأَرْضِ ‏
‏قَالَ ‏ ‏فَقُلْتُ ‏ ‏أَبِالذَّهَبِ وَالْوَرِقِ فَقَالَ أَمَّا بِالذَّهَبِ وَالْوَرِقِ فَلَا بَأْسَ بِهِ

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், “விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தங்கம் மற்றும் வெள்ளிக்(காசுகளுக்)கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) வழியாக ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்)

Share this Hadith: