அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2809

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏و قَالَ ‏ ‏الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى ‏ ‏يَكْتَالَهُ ‏


فَقُلْتُ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏لِمَ فَقَالَ أَلَا ‏ ‏تُرَاهُمْ يَتَبَايَعُونَ بِالذَّهَبِ وَالطَّعَامُ ‏ ‏مُرْجَأٌ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏مُرْجَأٌ

“உணவு தானியத்தை விலைக்கு வாங்கியவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் விற்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஏன்?”  என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “உணவு தானியம் இன்னும் வந்து சேராத நிலையில், அவர்கள் தானியத்திற்குத் தங்கத்தை (ஏற்றத் தாழ்வாக) விற்கிறார்கள் என்பதை நீர் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பில் “ … வந்து சேராத நிலையில் …” எனும் குறிப்பு இல்லை.

Share this Hadith: