அத்தியாயம்: 21, பாடம்: 8, ஹதீஸ்: 2816

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏قَالَ: ‏
قَدْ رَأَيْتُ النَّاسَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا ابْتَاعُوا الطَّعَامَ ‏ ‏جِزَافًا ‏ ‏يُضْرَبُونَ فِي أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِمْ وَذَلِكِ حَتَّى يُؤْوُوهُ إِلَى رِحَالِهِمْ ‏


قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَاهُ ‏ ‏كَانَ يَشْتَرِي الطَّعَامَ ‏ ‏جِزَافًا ‏ ‏فَيَحْمِلُهُ إِلَى أَهْلِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் மக்கள் உணவு தானியங்களை மொத்த விலைக்கு வாங்கியபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உணவு தானியத்தை மொத்த விலைக்கு வாங்குவார்கள். பின்னர் அதை (அங்கேயே விற்றுவிடாமல்) தம் வீட்டாரிடம் எடுத்துச் சென்று விடுவார்கள்” என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) தம்மிடம் கூறியதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: