حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا وَكِيعٌ حَدَّثَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ:
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبَ ضَارٍ أَوْ مَاشِيَةٍ نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ
قَالَ سَالِمٌ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُ أَوْ كَلْبَ حَرْثٍ وَكَانَ صَاحِبَ حَرْثٍ
“வேட்டை நாயையும் கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் தவிர பிற நாயை வளர்ப்பவருடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
குறிப்பு :
விளைநிலங்கள் வைத்திருந்த அபூஹுரைரா (ரலி), “விளைநிலங்களைக் காவல் காக்கும் நாயையும் தவிர” என்று (சேர்த்துக்) கூறுபவர்களாக இருந்தார்கள். என்று இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்தம் மகன் ஸாலிம் (ரஹ்) கூறினார்.