அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2920

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ: ‏
أُتِيَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالًا فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا قَالَ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا قَالَ يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِي ‏ ‏الْجَوَازُ ‏ ‏فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ ‏ ‏وَأُنْظِرُ ‏ ‏الْمُعْسِرَ فَقَالَ اللَّهُ ‏ ‏أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْ عَبْدِي ‏


فَقَالَ ‏ ‏عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ ‏ ‏وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ ‏ ‏هَكَذَا سَمِعْنَاهُ مِنْ ‏ ‏فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். அல்லாஹ்விடம் எவரும் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. எனவே அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி (ரலி) அவர்களும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் செவியுற்றோம்” என்று கூறினர்.

Share this Hadith: