அத்தியாயம்: 25, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3077

وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏ ‏

عَادَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ أُوصِي بِمَالِي كُلِّهِ ‏.‏ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ قُلْتُ فَالنِّصْفُ ‏‏ قَالَ ‏”‏ لاَ ‏”‏ ‏.‏ فَقُلْتُ أَبِالثُّلُثِ فَقَالَ ‏”‏ نَعَمْ وَالثُّلُثُ كَثِيرٌ ‏”‏

என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக நபி (ஸல்) வந்தார்கள். அப்போது நான், “என் செல்வங்கள் அனைத்தையும் மரண சாஸனம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) “வேண்டாம்” என்றார்கள். நான், “அவ்வாறாயின் (என் செல்வத்தில்) பாதியை?” என்று கேட்டேன். அதற்கும் “வேண்டாம்” என்றார்கள். நான் “மூன்றில் ஒரு பாகத்தை?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) “சரி; மூன்றில் ஒரு பாகம்கூட அதிகம்தான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

Share this Hadith: