و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ :
دَخَلْتُ عَلَى عَائِشَةَ أَنَا وَأَخُوهَا مِنْ الرَّضَاعَةِ فَسَأَلَهَا عَنْ غُسْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْجَنَابَةِ فَدَعَتْ بِإِنَاءٍ قَدْرِ الصَّاعِ فَاغْتَسَلَتْ وَبَيْنَنَا وَبَيْنَهَا سِتْرٌ وَأَفْرَغَتْ عَلَى رَأْسِهَا ثَلَاثًا قَالَ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ
நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அன்னையின் பால்குடிச் சகோதரர், நபி (ஸல்) பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது, எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரையிட்ட நிலையில் ஆயிஷா (ரலி) ஒரு ‘ஸாஉ’ அளவுள்ள பாத்திரத்தில் நீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்துக் காட்டினார்கள். தமது தலை மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள் (சைகை மூலம் அது எங்களுக்குத் தெரிந்தது).
நபி (ஸல்) அவர்களின் துணைவியர், தலையிலிருந்து காதின் சோனை வரை தொங்கும் அளவிற்குத் தம் தலை முடியைக் குறைத்து(அமைத்து)க் கொள்பவர்களாக இருந்தனர்.
அறிவிப்பாளர் : அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)