அத்தியாயம்: 3, பாடம்: 13, ஹதீஸ் எண்: 499

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورِ بْنِ صَفِيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏سَأَلَتْ ‏ ‏امْرَأَةٌ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ تَغْتَسِلُ مِنْ حَيْضَتِهَا قَالَ فَذَكَرَتْ أَنَّهُ عَلَّمَهَا كَيْفَ تَغْتَسِلُ ثُمَّ تَأْخُذُ ‏ ‏فِرْصَةً ‏ ‏مِنْ مِسْكٍ ‏ ‏فَتَطَهَّرُ بِهَا قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ بِهَا قَالَ ‏ ‏تَطَهَّرِي بِهَا سُبْحَانَ اللَّهِ وَاسْتَتَرَ ‏ ‏وَأَشَارَ لَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏بِيَدِهِ عَلَى وَجْهِهِ قَالَ ‏ ‏قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَاجْتَذَبْتُهَا إِلَيَّ وَعَرَفْتُ مَا أَرَادَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ ‏
‏و قَالَ ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي رِوَايَتِهِ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا آثَارَ الدَّمِ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ امْرَأَةً سَأَلَتْ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَيْفَ أَغْتَسِلُ عِنْدَ الطُّهْرِ فَقَالَ خُذِي ‏ ‏فِرْصَةً ‏ ‏مُمَسَّكَةً ‏ ‏فَتَوَضَّئِي بِهَا ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாயி(முடிவி)ன்போது எவ்வாறு குளிக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையை விளக்கினார்கள். “பிறகு கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சால் தூய்மைப் படுத்திக் கொள்” என்று சொன்னார்கள்.

அந்தப் பெண்மணி, “அதை வைத்து நான் எப்படித் தூய்மைப் படுத்திக் கொள்வது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (வெட்கத்துடன்) முகத்தை மூடிக் கொண்டு, “ஸுப்ஹானல்லாஹ்! அதனால் தூய்மைப் படுத்திக்கொள்” என்று மீண்டும் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்ல விரும்புவதை(யும் அவர்களது வெட்க உணர்வையும்) புரிந்து கொண்ட நான், அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்தப் பஞ்சினால் துடைத்துக் கொள்!” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

குறிப்பு:

“நபி (ஸல்) அவர்கள் (தமது முகத்தை) மூடிக் கொண்டார்கள்” என்பதை அறிவிக்கும்போது அறிவிப்பாளர் ஸுப்யான் பின் உயைனா (ரஹ்) தமது முகத்தின் மீது கையை வைத்து மூடிக் காட்டினார்.

ஆயிஷா (ரலி) வழியாகத் தம் தாயார் மூலமாக அறிவிக்கும் மன்ஸூர் (ரஹ்) அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்து கொள்ளும் போது எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சைப் பயன் படுத்தித் துப்புரவு செய்து கொள்வாயாக! என்று சொன்னார்கள்” என்றும் பிற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.

இப்னு அபீ உமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “இரத்தம் படிந்த இடங்களை” என்று பன்மையில் ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment