அத்தியாயம்: 3, பாடம்: 23, ஹதீஸ் எண்: 530

قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سَعِيدُ بْنُ خَالِدِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ ‏ ‏وَأَنَا أُحَدِّثُهُ هَذَا الْحَدِيثَ أَنَّهُ سَأَلَ ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏عَنْ الْوُضُوءِ مِمَّا مَسَّتْ النَّارُ ‏ ‏فَقَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّئُوا مِمَّا مَسَّتْ النَّارُ ‏

“நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்ற ஹதீஸை நான் ஸயீத் பின் காலித் பின் அம்ரு பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தபோது, உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் ஸயீத் (ரஹ்), “சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட பின் உளூச் செய்ய வேண்டுமா?” என்று கேட்டதாகவும் அதற்கு, “நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உர்வா (ரஹ்) பதில் கூறியதாகவும் ஸயீத் (ரஹ்) கூறினார்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) > உர்வா (ரஹ்) > ஸயீத் (ரஹ்) வழியாக இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment