حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ :
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ فَقَالَ ” اعْرِفْ عِفَاصَهَا وَوِكَاءَهَا ثُمَّ عَرِّفْهَا سَنَةً فَإِنْ جَاءَ صَاحِبُهَا وَإِلاَّ فَشَأْنَكَ بِهَا ” . قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ ”لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ” . قَالَ فَضَالَّةُ الإِبِلِ قَالَ ” مَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا تَرِدُ الْمَاءَ وَتَأْكُلُ الشَّجَرَ حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ” . قَالَ يَحْيَى أَحْسِبُ قَرَأْتُ عِفَاصَهَا
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றி (அதை என்ன செய்வது? என்று) கேட்டார். அப்போது நபி (ஸல்), “அதன் பையையும் முடிச்சையும் அடையாளம் பார்த்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொணடேயிரு. அதன் உரிமையாளர் (தேடி) வந்தால் கொடு(த்துவிடு), இல்லையேல் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக்கொள்” என்று சொன்னார்கள்.
அவர், (மீண்டும்) “வழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்க, நபி (ஸல்), “அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஒநாய்க்கு உரியது” என்று கூறினார்கள்.
அவர், (மீண்டும்) “வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். நபி (ஸல்), “உனக்கு அதைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கிறது? அதனுடன் (நீர்ருந்த) அதன் (திமிலும், நடப்பதற்கு) கால்குளம்பும் உள்ளன. அதை அதன் உரிமையாளன் சந்திக்கும்வரை அது நீர் நிலைக்குச் செல்லும்; (தாகம் தணித்துக்கொள்ளும்) மரத்திலிருந்து (அதன் இலைதழைகளைத்) தின்னும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)