அத்தியாயம்: 32, பாடம்: 29, ஹதீஸ் எண்: 3328

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ جَمِيعًا عَنْ سُفْيَانَ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ الشَّاعِرِ الأَعْمَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ :‏

حَاصَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الطَّائِفِ فَلَمْ يَنَلْ مِنْهُمْ شَيْئًا فَقَالَ ‏”‏ إِنَّا قَافِلُونَ إِنْ شَاءَ اللَّهُ ‏”‏ ‏.‏ قَالَ أَصْحَابُهُ نَرْجِعُ وَلَمْ نَفْتَتِحْهُ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اغْدُوا عَلَى الْقِتَالِ ‏”‏ ‏.‏ فَغَدَوْا عَلَيْهِ فَأَصَابَهُمْ جِرَاحٌ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّا قَافِلُونَ غَدًا ‏”‏ ‏.‏ قَالَ فَأَعْجَبَهُمْ ذَلِكَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தாயிஃப் நகரத்தாரை முற்றுகையிட்டபோது அந்நகரத்தாரை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, “இறைவன் நாடினால், நாம் (முற்றுகையை விலக்கிக்கொண்டு, நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்று கூறினார்கள். நபித்தோழர்கள், “இ(ந்நகரத்)தை வெல்லாமல் நாம் திரும்புவதா?” என்று கேட்டார்கள்.

(தோழர்களின் தயக்கத்தைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “காலையில் போருக்குப் போவோம், தயாராகுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்கள் (மறு நாள்) காலை போருக்குச் சென்று, பலத்த காயங்களுக்கு ஆளானார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சி(தரும் செய்தி)யாக அமைந்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

Share this Hadith: