அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3367

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَةِ”‏ قَالَ شُعْبَةُ أَوْ قَالَ ‏‏ اللَّهُمَّ لاَ عَيْشَ إِلاَّ عَيْشُ الآخِرَهْ فَأَكْرِمِ الأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அகழ் தோண்டிக்கொண்டிருந்தபோது),

“இறைவா! மறுமை வாழ்வே
(நிரந்தரமான) வாழ்வாகும் (அல்லது)
“இறைவா!
மறுமை வாழ்வைத் தவிர
வேறு (நிரந்தர) வாழ்வு
வேறெதுவுமில்லை’
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்
அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும்
நீ கண்ணியப்படுத்துவாயாக!”
என்று பாடினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

‘அல்லது’ எனும் ஐயத்துடன் அறிவிப்பவர் ஷுஅபா (ரஹ்) ஆவார்.