அத்தியாயம்: 32, பாடம்: 44, ஹதீஸ் எண்: 3369

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم كَانُوا يَقُولُونَ يَوْمَ الْخَنْدَقِ

نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الإِسْلاَمِ مَا بَقِينَا أَبَدًا أَوْ قَالَ عَلَى الْجِهَادِ شَكَّ حَمَّادٌ

وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ

‏اللَّهُمَّ إِنَّ الْخَيْرَ خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ ‏

அகழ்ப் போர் நாளில் முஹம்மது (ஸல்) அவர்களின் தோழர்கள்,
“நாங்கள் (எத்தகையோர் எனில்)
உயிரோடிருக்கும் காலம்வரை
நாங்கள் இஸ்லாத்தில் நிலைப்போம் (அல்லது)
அறப்போர் செய்வோம்
என முஹம்மது (ஸல்) அவர்களிடம்
உறுதிமொழி கொடுத்தவர்கள்”
என்று பாடிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்),

“இறைவா! மறுமையின் நன்மையே
(நிலையான) நன்மையாகும்.
ஆகவே, (அதற்காகப் பாடுபடும்)
அன்ஸாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும்
நீ மன்னிப்பருள்வாயாக!”
என்று பாடினார்கள்

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)