حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ ضَبَّةَ بْنِ مِحْصَنٍ، عَنْ أُمِّ سَلَمَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” سَتَكُونُ أُمَرَاءُ فَتَعْرِفُونَ وَتُنْكِرُونَ فَمَنْ عَرَفَ بَرِئَ وَمَنْ أَنْكَرَ سَلِمَ وَلَكِنْ مَنْ رَضِيَ وَتَابَعَ ” . قَالُوا أَفَلاَ نُقَاتِلُهُمْ قَالَ ” لاَ مَا صَلَّوْا ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சில தலைவர்கள் (எனக்குப் பின்) வருவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். யார் (தீமையைத் தெளிவாக) அறிந்துகொண்டாரோ அவர் பிழைத்தார். யார் வெறுத்தாரோ அவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணைபோனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)” என்று (ஒரு முறை) கூறினார்கள்.
மக்கள், “அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை (போரிட) வேண்டாம்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)