அத்தியாயம்: 33, பாடம்: 19, ஹதீஸ் எண்: 3460

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، – يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ – عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ :‏

أَنَّهُ دَخَلَ عَلَى الْحَجَّاجِ فَقَالَ يَا ابْنَ الأَكْوَعِ ارْتَدَدْتَ عَلَى عَقِبَيْكَ تَعَرَّبْتَ قَالَ لاَ وَلَكِنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَذِنَ لِي فِي الْبَدْوِ

நான் (ஒரு முறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃபிடம் சென்றேன். அவர், “இப்னுல் அக்வஉ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறி விட்டீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை. ஆயினும்,  கிராமத்தில் வசிக்க எனக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதியளித்தார்கள்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

Share this Hadith:

Leave a Comment