وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ قَالَ :
ضَحَّى خَالِي أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” تِلْكَ شَاةُ لَحْمٍ ” . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ ” ضَحِّ بِهَا وَلاَ تَصْلُحُ لِغَيْرِكَ ” . ثُمَّ قَالَ ” مَنْ ضَحَّى قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ ”
என் தாய்மாமா அபூபுர்தா (ரலி) (பெருநாள்) தொழுகைக்கு முன்பே பலி கொடுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது இறைச்சி(க்கான) ஆடு” என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை அறுத்து (பலி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவர்களுக்குப் பொருந்தாது” என்று சொல்லிவிட்டு, “தொழுகைக்கு முன்பே (பலிப் பிராணியை) அறுப்பவர், தம் (உணவுத்) தேவைக்காக அறுக்கின்றார். தொழுகைக்குப் பிறகு அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)