அத்தியாயம்: 36, பாடம்: 10, ஹதீஸ் எண்: 3747

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ الْهَمْدَانِيَّ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ يَقُولُ :‏

لَمَّا أَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ فَأَتْبَعَهُ سُرَاقَةُ بْنُ مَالِكِ بْنِ جُعْشُمٍ – قَالَ – فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَاخَتْ فَرَسُهُ فَقَالَ ادْعُ اللَّهَ لِي وَلاَ أَضُرُّكَ ‏.‏ قَالَ فَدَعَا اللَّهَ – قَالَ – فَعَطِشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَرُّوا بِرَاعِي غَنَمٍ ‏.‏ قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فَأَخَذْتُ قَدَحًا فَحَلَبْتُ فِيهِ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كُثْبَةً مِنْ لَبَنٍ فَأَتَيْتُهُ بِهِ فَشَرِبَ حَتَّى رَضِيتُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிலிருந்து மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது, அவர்களைப்  (பிடிப்பதற்காகப்) பின்தொடர்ந்து, ஸுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் என்பவர் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸுராக்காவிற்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே அவரது குதிரை மணலில் அழுந்திவிட்டது.

ஸுராக்கா (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “உங்களுக்கு நான் தீங்கிழைக்க மாட்டேன், எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர்  ஆட்டு இடையன் ஒருவனை அவர்கள் கடந்துசென்றபோது அவர்கள் தாகித்திருந்தார்கள். (அடுத்து நடந்தவை பற்றி) அபூபக்ரு அஸ்ஸித்தீக் (ரலி) கூறுகிறார்கள்:

நான் ஒரு கிண்ணத்தை எடுத்து (ஓர் ஆட்டிலிருந்து) சிறிதளவு பாலைக் கறந்து, அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்(து கொடுத்)தேன். நான் திருப்தியடையும் அளவுக்கு அதிலிருந்து அவர்கள் அருந்தினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment