அத்தியாயம்: 37, பாடம்: 33, ஹதீஸ் எண்: 3961

وَحَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ أَخْبَرَنَا مُعَاذٌ – وَهُوَ ابْنُ هِشَامٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ :‏

أَنَّ مُعَاوِيَةَ قَالَ ذَاتَ يَوْمٍ إِنَّكُمْ قَدْ أَحْدَثْتُمْ زِيَّ سَوْءٍ وَإِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الزُّورِ ‏.‏ قَالَ وَجَاءَ رَجُلٌ بِعَصًا عَلَى رَأْسِهَا خِرْقَةٌ قَالَ مُعَاوِيَةُ أَلاَ وَهَذَا الزُّورُ ‏.‏ قَالَ قَتَادَةُ يَعْنِي مَا يُكَثِّرُ بِهِ النِّسَاءُ أَشْعَارَهُنَّ مِنَ الْخِرَقِ ‏

ஒரு நாள் முஆவியா (ரலி) (எங்களிடையே உரையாற்றுகையில்), “நீங்கள் ஒரு மோசமான கலாசாரத்தை உருவாக்கிவிட்டிருக்கின்றீர்கள். அல்லாஹ்வின் நபி (ஸல்) போலித்தனத்திற்குத் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். (அப்போது) ஒருவர் தடியொன்றைக் கொண்டு வந்தார். அதன் முனையில் துண்டுத் துணியொன்று இருந்தது. முஆவியா (ரலி), “பாருங்கள்! இதுவும் போலியைச் சேர்ந்ததுதான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

“பெண்கள் துண்டுத் துணிகளைச் சேர்த்து தங்களுடைய தலை முடிகளை அதிகமாக்கிக் காட்டுவதையே அவ்வாறு முஆவியா (ரலி) குறிப்பிட்டார்கள்” என்று இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment