حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، وَأَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ :
أَنَّهُ سَمِعَهُ يَسْأَلُ أُسَامَةَ بْنَ زَيْدٍ مَاذَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي الطَّاعُونِ فَقَالَ أُسَامَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” الطَّاعُونُ رِجْزٌ أَوْ عَذَابٌ أُرْسِلَ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَوْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَإِذَا سَمِعْتُمْ بِهِ بِأَرْضٍ فَلاَ تَقْدَمُوا عَلَيْهِ وَإِذَا وَقَعَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا فِرَارًا مِنْهُ ”
وَقَالَ أَبُو النَّضْرِ ” لاَ يُخْرِجُكُمْ إِلاَّ فِرَارٌ مِنْهُ ”
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் (என் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளைநோயைப் பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு உஸாமா (ரலி), “கொள்ளைநோய் என்பது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது (அ) உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது (அவர்களின் குற்றங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) தண்டனை (அ) வேதனை ஆகும். அது ஒரு பகுதியில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டால் அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து வெளியேறிச் செல்லாதீர்கள்’ என்று சொன்னார்கள்” எனப் பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவருடைய மகன் ஆமிர் (ரஹ்)
குறிப்பு :
“அந்நோயிலிருந்து தப்பியோடும் நோக்கத்துடன் நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (தவிர்க்க முடியாத காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் குற்றமில்லை)” என்று அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுந்நள்ரு (ரஹ்) குறிப்பிடுகின்றார்.