அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4110

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ غُولَ ‏”


وَسَمِعْتُ أَبَا الزُّبَيْرِ يَذْكُرُ أَنَّ جَابِرًا فَسَّرَ لَهُمْ قَوْلَهُ ‏”‏ وَلاَ صَفَرَ ‏” فَقَالَ أَبُو الزُّبَيْرِ الصَّفَرُ الْبَطْنُ ‏.‏ فَقِيلَ لِجَابِرٍ كَيْفَ قَالَ كَانَ يُقَالُ دَوَابُّ الْبَطْنِ ‏.‏ قَالَ وَلَمْ يُفَسِّرِ الْغُولَ ‏.‏ قَالَ أَبُو الزُّبَيْرِ هَذِهِ الْغُولُ الَّتِي تَغَوَّلُ

“தொற்றுநோய் என்பது கிடையாது; ஸஃபர் (வயிற்றுத் தொற்றுநோய்) என்பதும் கிடையாது; கொள்ளிவாய்ப் பிசாசும் கிடையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்கள்: ஜாபிர் (ரலி), ‘ஸஃபர் கிடையாது’ என்பதற்கு விளக்கமளிக்கையில், “ஸஃபர் என்பது வயிற்று நோயாகும்” என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், “(அது) எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அது, வயிற்றில் உருவாகும் ஒருவகை புழுவால் ஏற்படும் நோய் என்று சொல்லப்படுவதுண்டு” என்றார்கள்.

ஆனால், ஜாபிர் (ரலி), ஃகூல் என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், “பாலைவனப் பயணிகளை பயமுறுத்தும் கொள்ளிவாய்ப் பிசாசு என்று மூடத்தனமாக நம்பப்பட்டதே ஃகூல் என்பதாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அறிவிக்கின்றார்.

Share this Hadith:

Leave a Comment