அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4018

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أُنَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ ‏‏ قَالَ ‏”‏ وَعَلَيْكُمْ ‏” قَالَتْ عَائِشَةُ قُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَالذَّامُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا عَائِشَةُ لاَ تَكُونِي فَاحِشَةً ‏” فَقَالَتْ مَا سَمِعْتَ مَا قَالُوا فَقَالَ ‏”‏ أَوَلَيْسَ قَدْ رَدَدْتُ عَلَيْهِمُ الَّذِي قَالُوا قُلْتُ وَعَلَيْكُمْ” ‏


حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَفَطِنَتْ بِهِمْ عَائِشَةُ فَسَبَّتْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَهْ يَا عَائِشَةُ فَإِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفُحْشَ وَالتَّفَحُّشَ ‏” وَزَادَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க'” (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) “வ அலைக்கும்“ (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் “அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு” (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக ஆகிவிடாதே!” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்தான் அவர்கள் சொன்னதற்கு “வ அலைக்கும்“ (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆயிஷா (ரலி), யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) யூதர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் விரும்பியோ விரும்பாமலோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்” எனும் (58:8) வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment