அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 600

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِعَمْرٍو ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏فِي كُلِّ الصَّلَاةِ يَقْرَأُ فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَا مِنْكُمْ ‏
‏فَقَالَ لَهُ رَجُلٌ إِنْ لَمْ أَزِدْ عَلَى ‏ ‏أُمِّ الْقُرْآنِ ‏ ‏فَقَالَ إِنْ زِدْتَ عَلَيْهَا فَهُوَ خَيْرٌ وَإِنْ انْتَهَيْتَ إِلَيْهَا أَجْزَأَتْ عَنْكَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அவர்கள் எங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி ஒலியுயர்த்தி ஓதுகிறோம். நாங்கள் செவியுறவியலா வண்ணம் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறவியலா வண்ணம் அமைதியாக ஓதுகிறோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அப்போது ஒருவர், “குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தைவிடக் கூடுதலாக (எதையும்) நான் ஓதாவிட்டால்?” என்று வினவினார். அதற்கு அபூஹுரைரா (ரலி), “அதைவிட அதிகமாக ஓதினால் அது உமக்குச் சிறந்ததாகும். அத்துடன் முடித்துக் கொண்டால், அது உமக்குப் போதுமானதாகி விடும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment