حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ زُرَارَةَ بْنَ أَوْفَى يُحَدِّثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ فَجَعَلَ رَجُلٌ يَقْرَأُ خَلْفَهُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى فَلَمَّا انْصَرَفَ قَالَ أَيُّكُمْ قَرَأَ أَوْ أَيُّكُمْ الْقَارِئُ فَقَالَ رَجُلٌ أَنَا فَقَالَ قَدْ ظَنَنْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ كِلَاهُمَا عَنْ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ بِهَذَا الْإِسْنَادِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ وَقَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) லுஹ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒருவர் “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா” அத்தியாயத்தை (உரத்து) ஓதலானார். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் (எனக்குப் பின்னால் நின்று உரத்து) ஓதியவர்/ஓதிக்கொண்டிருந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நான்தான் (ஓதினேன்)” என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் சிலர் (அவ்வாறு உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதாக எண்ணுகின்றேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
குறிப்பு :
இபுனு அபீஉரூபா (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) லுஹ்ருத் தொழுவித்துவிட்டு, “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகின்றேன்” எனக் கூறியதாக இடம்பெற்றுள்ளது.