حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ أَبِي عَوَانَةَ قَالَ سَعِيدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ :
صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الظُّهْرِ أَوْ الْعَصْرِ فَقَالَ أَيُّكُمْ قَرَأَ خَلْفِي بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى فَقَالَ رَجُلٌ أَنَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ قَالَ قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு முறை) எங்களுக்கு லுஹ்ரு அல்லது அஸ்ருத் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், “ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று உரத்து) ஓதியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், “நன்மை (கிடைக்கும் என) நாடி அவ்வாறு ஓதியவன் நான்தான்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் சிலர் (உரத்து) ஓதுவது என(து ஓதலு)க்கு இடையூறாக இருப்பதை அறிகின்றேன். (எனக்குப் பின்னால் நின்று தொழுபவர் எவரும் உரத்து ஓத வேண்டாம்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)