அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 630

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ قَالَتْ ‏
‏أَوَّلُ مَا ‏ ‏اشْتَكَى ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَاسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِهَا وَأَذِنَّ لَهُ قَالَتْ فَخَرَجَ وَيَدٌ لَهُ عَلَى ‏ ‏الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏وَيَدٌ لَهُ عَلَى رَجُلٍ آخَرَ وَهُوَ ‏ ‏يَخُطُّ ‏ ‏بِرِجْلَيْهِ فِي الْأَرْضِ ‏
‏فَقَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَتَدْرِي مَنْ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏هُوَ ‏ ‏عَلِيٌّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோதுதான் முதலில் உடல் நலம் குன்றியது. அப்போது எனது வீட்டில் தங்கி, சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒரு கையை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் (தோள்)மீதும் மற்றொரு கையை மற்றொருவரின் (தோள்)மீதும் வைத்து(த் தொங்கி)க்கொண்டு, தம் கால்கள் பூமியில் இழுபட (எனது வீட்டிற்கு) வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

“இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ‘ஆயிஷா (ரலி) பெயர் குறிப்பிடாத அந்த மற்றொருவர் யார் தெரியுமா? அவர்தாம் அலீ (ரலி)’ என்றார்கள்” என்பதாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

Share this Hadith:

Leave a Comment