அத்தியாயம்: 4, பாடம்: 38, ஹதீஸ் எண்: 726

حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏

عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏إِنِّي لَا ‏ ‏آلُو ‏ ‏أَنْ أُصَلِّيَ بِكُمْ كَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِنَا قَالَ فَكَانَ ‏ ‏أَنَسٌ ‏ ‏يَصْنَعُ شَيْئًا لَا أَرَاكُمْ تَصْنَعُونَهُ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ انْتَصَبَ قَائِمًا حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ مَكَثَ حَتَّى يَقُولَ الْقَائِلُ قَدْ نَسِيَ ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்ததைப் பார்த்ததைப் போன்று, அதில் ஒருகுறையும் வைக்காமல் நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்” என (ஒருபோது) எங்களுக்கு அனஸ் (ரலி) கூறி(த் தொழவைக்கலா)னார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) செய்த ஒன்றை நீங்கள் செய்ய நான் பார்த்ததில்லை. அவர்கள் குனிந்து (ருகூஉச் செய்து) நிமிர்ந்து, (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள்; ஸஜ்தாச் செய்து தலையை உயர்த்தியதும் (அடுத்துச் செய்ய வேண்டியதை) மறந்துவிட்டார்களோ என்று எண்ணுமளவுக்கு இருப்பில் (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஸாபித் அல் புனானீ (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment