அத்தியாயம்: 40, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4171

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي خُلَيْدُ بْنُ جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ كَانَتِ امْرَأَةٌ مِنْ بَنِي إِسْرَائِيلَ قَصِيرَةٌ تَمْشِي مَعَ امْرَأَتَيْنِ طَوِيلَتَيْنِ فَاتَّخَذَتْ رِجْلَيْنِ مِنْ خَشَبٍ وَخَاتَمًا مِنْ ذَهَبٍ مُغْلَقٍ مُطْبَقٍ ثُمَّ حَشَتْهُ مِسْكًا وَهُوَ أَطْيَبُ الطِّيبِ فَمَرَّتْ بَيْنَ الْمَرْأَتَيْنِ فَلَمْ يَعْرِفُوهَا فَقَالَتْ بِيَدِهَا هَكَذَا ‏”‏ ‏.‏ وَنَفَضَ شُعْبَةُ يَدَهُ ‏

“பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண்ணொருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்வாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப்பார்கள் ஆகவே,) அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாகத் தன்னை) ஆக்கிக் கொண்டாள்.

மேலும், தங்க மோதிரம் ஒன்றையும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. அவள் அக்குழிக்குள் நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். பின்னர் அவள் அவ்விரு பெண்களுக்கிடையே நடந்து சென்றாள். அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத்திலிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


குறிப்பு :

இதை அறிவிக்கும்போது, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) தமது கையை உதறிக் காட்டினார்கள்.

Share this Hadith:

Leave a Comment