அத்தியாயம்: 43, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4268

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ نُمَيْرٍ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

قَدِمَ نَاسٌ مِنَ الأَعْرَابِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا أَتُقَبِّلُونَ صِبْيَانَكُمْ فَقَالُوا نَعَمْ ‏.‏ فَقَالُوا لَكِنَّا وَاللَّهِ مَا نُقَبِّلُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَأَمْلِكُ إِنْ كَانَ اللَّهُ نَزَعَ مِنْكُمُ الرَّحْمَةَ ‏”‏ ‏


وَقَالَ ابْنُ نُمَيْرٍ ‏”‏ مِنْ قَلْبِكَ الرَّحْمَةَ ‏”‏

கிராமவாசிகள் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். அப்போது அவர்கள் (மதீனா நகர மக்களிடம்), “நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுவீர்களா?” என்று கேட்டனர். மக்கள் “ஆம்“ என்று பதிலளித்தனர். அதற்கு அந்தக் கிராமவாசிகள் “ஆனால், நாங்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! (குழந்தைகளை) முத்தமிடுவதில்லை” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ் உங்களிடமிருந்து கருணையைப் பறித்துவிட்டான் எனில், என்னால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இப்னு நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உமது உள்ளத்திலிருந்து கருணையைப் பறித்துவிட்டால், (நான் என்ன செய்ய?)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment